செய்திகள் :

புரி ஜெகந்நாதர் நீராட்டு விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

post image

ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதரின் நீராட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் ஆலயத்தில் பத்து நாள்கள் நடைபெறவிருக்கும் தேர்த் தேர்விழா ஜூன் 27ல் தொடங்குகிறது. மூன்று தேர்கள் புரியின் வீதிகளில் உலா வர இருக்கின்றன. ஜெகந்நாதரின் ரத யாத்திரைக்கு முன்னதாக நீராட்டு திருவிழா நடத்தப்படுகிறது.

தேவ ஸ்நான பூர்ணிமா என்று அழைக்கப்படும் இந்த விழா ஆவணி மாதத்தில் பௌர்ணமி அன்று மரச் சிலைகள் கருவறையிலிருந்து ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு நீராடும் சடங்குகளுக்காக வைக்கப்படுகிறது. அந்தவகையில், இன்று நடைபெற்ற நீராட்டு விழாவில் ஜெகந்நாதர், பாலபத்ரர் மற்றும் தேவி சுபத்திரை ஆகிய மூன்று தெய்வங்களின் சிலைகளும் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு கோயிலின் நீராட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டது. இந்த நாளை ஜெகந்நாதரின் பிறந்தநாளாகவும் கருதப்படுகிறது.

வேத மந்திரங்கள் ஓதப்படும் வேளையில், கோயில் வளாகத்தில் அமைந்துள்ள தங்க கிணறிலிருந்து 108 குடம் புனித நீர் எடுத்து சிலைகள் மீது ஊற்றப்படும். மேலும் சிலைகளைச் சடங்கு ரீதியாக துடைத்து, யானையின் உடை கொண்டு அலங்கரிக்கப்படுகிறது. இதையடுத்து இரவு 7.30 மணியளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

நீராட்டு நிகழ்ச்சியைக் காண ஒவ்வொரு வருடரும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுவது வழக்கமாகும். இதையடுத்து அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விமான விபத்து: 256 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 256 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வெளிநாட்டினா் உள்பட 230 பயணிகள் மற்றும் 12 ஊழியா்களு... மேலும் பார்க்க

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு!

இந்தியா வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்துவதற்கான தடை வரும் ஜூலை 24 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்து: முதன்முதலாக இஸ்ரேலில் இருந்து 161 இந்தியர்கள் மீட்பு!

'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையின்கீழ் இஸ்ரேலில் இருந்து முதல்முறையாக 161 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.இஸ்ரேல்-ஈரான் மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களை மீட்க 'ஆபரேஷன் சிந்து' என்ற பெயரில... மேலும் பார்க்க

நிலையான எரிபொருள் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: மத்திய அரசு

புது தில்லி: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ‘பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பலத்த மழையால் வைஷ்ணவ தேவி கோயில் பாதையில் நிலச்சரிவு

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ரியாசி மாவட்டத்தின் திரிகூட மலைப்பகுதியில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடம் திங்கள்கிழமை சேதம... மேலும் பார்க்க

இந்திய விமானங்களுக்குத் தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பதாக பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவித்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவ... மேலும் பார்க்க