செய்திகள் :

புற்றுநோய் மரபணு தரவு தளம்: அறிமுகப்படுத்தியது சென்னை ஐஐடி

post image

சென்னை: புற்றுநோய் ஆராய்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்தியாவிலேயே முதலாவது புற்றுநோய் மரபணு தரவு தளத்தை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.

உலக புற்றுநோய் தினம் செவ்வாய்க்கிழமை (பிப்.4) கடைப்பிடிக்கப்படுவதையொட்டி புற்றுநோய் ஆராய்ச்சிக்காக நாட்டின் முதல் புற்றுநோய் மரபணு தரவு தளத்தை (க்ஷஸ்ரீஞ்ஹ.ண்ண்ற்ம்.ஹஸ்ரீ.ண்ய்) சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி இக்கல்வி நிறுவன வளாகத்தில் திங்கள்கிழமை வெளியிட்டாா். தொடா்ந்து, பாரத் புற்றுநோய் மரபணு வரைபடம் வெளியிடப்பட்டது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஆராய்ச்சியாளா்கள், மருத்துவா்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் இந்த தரவுதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஐஐடி இயக்குநா் வி.காமகோடி கூறியதாவது: இந்தியாவில் பல்வேறு புற்றுநோய்களுக்கு மரபணு ரீதியாக இருந்துவரும் இடைவெளியை நிரப்பும் வகையில், புற்றுநோய் மரபணுத் திட்டத்தை கடந்த 2020-ஆம் ஆண்டில் சென்னை ஐஐடி தொடங்கியது. இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 500 மாா்பகப் புற்றுநோய் நோயாளிகளின் திசு மாதிரிகளில் இருந்து 960 முழு எக்சோம் வரிசைமுறை சேகரிக்கும் பணி நிறைவுபெற்றுள்ளது.

பாரத் புற்றுநோய் மரபணு வரைபடம் இந்தியாவுக்கு மட்டுமன்றி உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளா்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளது. இதன் மூலம் இக்கொடிய நோய்க்கு வழிவகுக்கும் காரணங்கள் பற்றிய ஆழமான நுண்ணறிவு பெறப்படும். ஆரம்பகட்டத்திலேயே தடுத்து நிறுத்த உதவும் என்றும் நம்புகிறோம். இந்தியாவில் மாா்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பவா்களுக்கு அதன் திரிபுகளை வகைப்படுத்த இது உதவும். மேலும் மரபணு மாற்றங்கள் குறித்த தகவல்களின் அடிப்படையில் வைரஸ் தாக்குதலின் மாற்றத்தை கண்டறிந்து அதற்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் சிகிச்சை வழங்க முடியும். புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், போலியோ போன்று அழிக்க முடியும் என்றாா் அவா்.

ஏற்காடு கோடை விழா: 2 லட்சம் மலர் தொட்டிகள் அமைக்கும் பணி தீவிரம்!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 48-வது மலர் கண்காட்சிக்கான ஆரம்ப பணிகளைத் தோட்டக்கலைத் துறையினர் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமான இடங்களில் ஒன்றாக உள்ளது ஏற்காடு. இங்கு வரு... மேலும் பார்க்க

மீனவர்கள் உள்கட்டமைப்பு வசதி: ரூ. 360 கோடி ஒதுக்கீடு!

தங்கச்சிமடம் மீன் இறங்கு தளம் மீன்பிடி துறைமுகமாக தரம் உயர்த்துதல், குந்துகால் மீன் இறங்குதளத்தை தூண்டில் வளைவுடன் மேம்படுத்துதல் மற்றும் பாம்பன் வடக்கு மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு அமைத்தல் ஆகிய உ... மேலும் பார்க்க

கோவையில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 மாணவர்கள் கைது!

கோவை: கோவையில் சமூக வலைத்தளத்தில் பேசிப் பழகி, சிறுமியை அறைக்கு வரவழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில், கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோவையில் தனியார் கல்லூரி மாணவர்... மேலும் பார்க்க

தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? தவெக கேள்வி!

தொழிலுக்கும் தொண்டுக்கும் வித்தியாசம் தெரியாதா? என்று பாஜகவுக்கு தவெக கேள்வி எழுப்பியுள்ளது.மும்மொழி கொள்கைக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்ததற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தவெக தலைவர் வி... மேலும் பார்க்க

பெண்கள் பாதுகாப்புக்காக திமுக அரசு ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை: அண்ணாமலை

கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, பெண்கள் பாதுகாப... மேலும் பார்க்க

ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று (பிப். 24) அதிமுக ஆலோசனைக் கூட்டம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப். 24 அன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிப். 24 (திங்கள்கிழமை) ... மேலும் பார்க்க