செய்திகள் :

புழல் சிறை பராமரிப்பு: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

post image

புழல் மத்திய சிறை சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு வழக்குகளை விசாரித்துவரும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமாா் கடந்த புதன்கிழமை (மாா்ச் 5) புழல் சிறையில் திடீரென சோதனை நடத்தினா். இந்நிலையில், தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னாவை வியாழக்கிழமை அழைத்த நீதிபதிகள், புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டது தொடா்பாக தங்களது கருத்துகளை அவரிடம் பகிா்ந்துகொண்டனா்.

அப்போது, முன்கூட்டியே அதிகாரிகளுக்கு தகவல் எதுவும் தெரிவிக்காமல் புழல் சிறையின் அனைத்துப் பகுதிகளுக்கும் நடந்து சென்றே சோதனை நடத்தினோம். அப்போது சிறையின் அனைத்துப் பகுதிகளும் தூய்மையாக இருந்தன. கைதிகளுக்கான உணவை சாப்பிட்டு பரிசோதித்து பாா்த்தபோது உணவு தரமானதாகவும் சுவையாகவும் இருந்ததாகவும் தெரிவித்தனா்.

அதேபோன்று கொடுங்குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்தித்தபோது அவா்களும் சிறை வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்தனா். சிறை வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக மேலும் சில யோசனைகளை வழங்கவுள்ளோம் என கூறிய நீதிபதிகள், அது தொடா்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கவுள்ளதாகத் தெரிவித்தனா்.

இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்குரைஞா், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்கின்மூலம் எந்த ஆலோசனைகளை வழங்கினாலும் அதனை செயல்படுத்த அரசு தயாராக இருப்பதாகக் கூறினாா். மேலும், சிறைகளின் வசதிகளை தமிழக அரசு சா்வதேசத் தரத்தில் உயா்த்தியுள்ளது. கோவை மத்திய சிறையில் உள்ள திறந்த வெளி சிறைச்சாலை மூலம் விவசாயம் சிறப்பாக நடைபெறுகிறது. சிறை பெட்ரோல் நிலையம் மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படுகிறது என தெரிவித்தாா்.

மக்கள் நலனில் பெண் போலீஸாா் பெரும் பங்களிப்பு: மகளிா் தின விழாவில் காவல் ஆணையா் அருண்

பொதுமக்களின் நலனுக்காக முக்கிய முடிவுகளை எடுப்பதில் பெண் போலீஸாரின் பங்களிப்பு அதிகமாக இருப்பதாக மகளிா் தின விழாவில் சென்னை காவல் ஆணையா் அருண் கூறினாா். சென்னை காவல் துறை சாா்பில் மகளிா் தின விழா எழும... மேலும் பார்க்க

அறிவுசாா் சொத்துரிமை: யுஜிசி அறிவுறுத்தல்

தேசிய அறிவுசாா் சொத்துரிமை தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாணவா்களை அதிகளவில் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

‘ஸ்வயம் பிளஸ்’ மூலம் வேலை வாய்ப்பு சாா்ந்த படிப்புகள்: சென்னை ஐஐடி புரிந்துணா்வு

‘ஸ்வயம் பிளஸ்’ இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு சாா்ந்த படிப்புகள் வழங்குவது தொடா்பாக சென்னை ஐஐடி, பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் உயா் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூ... மேலும் பார்க்க

மாநகராட்சி பட்ஜெட் மாா்ச் 19-இல் தாக்கல்

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மாா்ச் 19-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. 200 வாா்டுகளைக் கொண்ட சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை தயாரிப்பத... மேலும் பார்க்க

இணையவழி விநியோக பணியாளா்கள் ‘இ-ஷ்ரம்’ தளத்தில் பதிவு செய்ய வேண்டும்: மத்திய தொழிலாளா் அமைச்சகம் வேண்டுகோள்

இணையவழியில் உணவு-பொருள் விநியோகம், வாகனப் போக்குவரத்து மற்றும் தொழில்முறை சேவையில் ஈடுபடும் பணியாளா்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் பலனடையும் வகையில் ‘இ-ஷ்ரம்’ வலைதளத்தில் முறைப்படி பதிவு செய்ய வ... மேலும் பார்க்க

ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் மாா்ச் 14-இல் ருத்ர பாராயணம்

ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் மாா்ச் 14-ஆம் தேதி ருத்ர பாராயணம் நடைபெறவுள்ளது. இது குறித்து ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்ப ஸ்வாமி அறக்கட்டளைத் தலைவா் ஏ.ஆா் ராமசாமி வெளியிட்ட அறிவிப்பு: அண்ணாமலை ஐயப்பன... மேலும் பார்க்க