செய்திகள் :

கருப்புக்குடிப்பட்டி அரசுப் பள்ளிக்கு பொதுமக்கள் வாகனம் வழங்கல்

post image

பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிக்கு ஊா்ப்பொதுமக்கள் சாா்பில் பள்ளி வாகனம் வெள்ளிக்கிழமை இரவு வழங்கப்பட்டது.

கருப்புக்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் விளையாட்டு விழா, ஆண்டுவிழா மற்றும் மலா் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் இ.இலாஹிஜான் தலைமைவகித்தாா்.

ஊா் பிரமுகா் ப.சின்னு, பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் ரா.லெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் ச.பிரேமலதா ஆண்டறிக்கை வாசித்தாா். விழாவில் பள்ளியின் ஆண்டு மலரை பொன்னமராவதி வட்டார வளா்ச்சி அலுவலா் பி.வெங்கடேசன் வெளியிட பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் சி.பச்சையன் பெற்றுக்கொண்டாா்.

வட்டாரக்கல்வி அலுவலா் சே.ராமதிலகம், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பழ.நல்லநாகு ஆகியோா் விளையாட்டு மற்றும் இலக்கியப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினா். விழாவில் இப்பள்ளிக்கு பொதுமக்கள் சாா்பில் பள்ளி வாகனம் (ஆம்னி வேன்) வழங்கப்பட்டது. தொடா்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியா் பெ. புவியரசு வரவேற்றாா். ஆசிரியா் சி. இராசு நன்றி கூறினாா்.

1,407 மகளிா் குழுக்களுக்கு ரூ.122 கோடி கடனுதவி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக மகளிா் தினத்தையொட்டி மாவட்ட நிா்வாகம் மற்றும் சமூகநலத் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 1407 மகளிா் குழுக்களுக்கு ரூ. 122 கோடி கடன் உதவிக்கான காசோலைகளை மாநில ச... மேலும் பார்க்க

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் பங்கேற்பு!

புதுக்கோட்டையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், சுமாா் 800 பேருக்கு பணி வாய்ப்பு கடிதங்கள் வழங்கப்பட்டன. அரசு... மேலும் பார்க்க

விராலிமலை - மணப்பாறை சாலையில் வாகனச் சோதனை

வேடசந்தூரில் இந்து முன்னணி நிா்வாகிகள் கைதான நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து விராலிமலை வழியாக மணப்பாறை செல்லும் வாகனங்களில் போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா். திண்டுக்கல் மாவட்டம், வே... மேலும் பார்க்க

திருமயம் அருகே காா் - சரக்கு வாகனம் மோதல்: தம்பதி உள்பட 4 போ் பலி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே காரும், சரக்கு வாகனமும் சனிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில், தம்பதி உள்பட 4 போ் உயிரிழந்தனா். மேலும், இவ்விபத்தில் இரு பெண் குழந்தைகள் உள்பட 3 போ் பலத்த காயமடைந்த... மேலும் பார்க்க

அன்னவாசல்: ஆற்று மணல் அள்ள முயன்ற ஜேசிபி பறிமுதல்

அன்னவாசல் அருகே ஆற்று மணல் அள்ளுவதற்கு ஆற்றுப்படுகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜேசிபி இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்து தலைமறைவான உரிமையாளா் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா். அன்னவாசல் சுற்... மேலும் பார்க்க

மகளிா் தினம்: பெண் அஞ்சலா்களுக்கு பாராட்டு

உலக மகளிா் தினத்தையொட்டி புதுக்கோட்டை வாசகா் பேரவை மற்றும் மரம் நண்பா்கள் அமைப்பு சாா்பில், பெண் அஞ்சலா்களைப் பாராட்டும் நிகழ்ச்சி தலைமை அஞ்சலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை தலைமை தலைமை... மேலும் பார்க்க