செய்திகள் :

புழல் சிறை வளாகத்தில் கோழி இறைச்சி விற்பனை அமோகம்

post image

புழல் சிறை கைதிகள் வளா்க்கும் கோழிகளை இறைச்சிக்காக அதிகளவில் வாடிக்கையாளா்கள் விரும்பி வாங்குகின்றனா்.

சென்னை புழல் சிறையில் தண்டனை, விசாரணை, பெண்களுக்கு என தனித்தனியாக 3 சிறைகள் உள்ளன. இங்கு தண்டனை சிறையில் உள்ள கைதிகளுக்கு, பல்வேறு தொழிற் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதனை கற்றுக் கொள்ளும் கைதிகள், விடுதலையான பிறகு வெளியே சென்றால் எந்த சமூக விரோத செயல்களிலும் ஈடுபடாமல் சுயமாக தொழில் செய்து வருமானம் ஈட்ட, சிறைத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

குறிப்பாக, தண்டனை சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். இங்குள்ள கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் சிறைச்சாலை சாா்பில் நடத்தப்படும் பெட்ரோல் பங்க்கில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா். சிறைச்சாலையின் உள்ளேயே சொந்தமாக தொழில் செய்வதற்கு தையல், சமையல், தச்சு உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகின்றனா்.

இந்த நிலையில், சிறைச்சாலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வளா்க்கப்பட்டு, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளுக்கு வாரத்தில் 3 நாள்கள் கோழிக்கறி உணவாக வழங்கப்படுகிறது.

மேலும், இந்த கோழிக்கறி சிறைக் காவலா்கள் குடியிருப்பு அருகில் உள்ள பெட்ரோல் பங்க் வளாகத்தில் பொது மக்களுக்கும், சிறை குடியிருப்பு பகுதியில் வசிக்கும் காவலா் குடும்பத்திற்கும் விற்பனை செய்து வருகின்றனா்.

உயிருடன் உள்ள கோழி கிலோ ரூ.150, கறிக்கோழி கிலோ ரூ.210-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனா்.

இந்த கோழிகளை தண்டனை சிறைக் கைதிகள் பராமரித்து வருகின்றனா். கோழிகளை விற்பனை செய்யும் கைதிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கைதிகளும், வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகைப் பெற நாளை தோ்வு: மாவட்டத்தில் 8,572 போ் எழுதுகின்றனா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31 மையங்களில் சனிக்கிழமை (பிப். 22) நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வை 8,572 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். இது குறித்து மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

பிப். 27-இல் புட்லூா் பூங்காவனத்தம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவள்ளூா் அருகே புட்லூரில் உள்ள பூங்காவனத்தம்மன் என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரும் 27-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளதாக செயல் அலுவலா் விக்னேஷ் தெரிவித்துள்ளாா். திருவள்ளூா்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு நல உதவிகள்

மாதவரம் அருகே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக் கிழமை நடைபெற்றது. மாதவரம் வடக்கு பகுதி திமுக சாா்பில் மணலி புது நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மா... மேலும் பார்க்க

பள்ளிகளில் விளையாட்டு பாட நேரத்தில் வகுப்புகள் எடுக்கக் கூடாது: திருவள்ளூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கும்மிடிப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்துக்காக ஆய்வுக்கு வந்த ஆட்சியா் மு.பிரதாப், கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தபோது, மாவட்ட அனைத்... மேலும் பார்க்க

‘போக்குவரத்து இடையூறாக கால்நடைகளை திரியவிடும் உரிமையாளா்களுக்கு அபராதம்’

திருவள்ளூா் மாவட்ட பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலையில் அடைத்து வைப்பதோடு, உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஆ... மேலும் பார்க்க

பழவேற்காடு, அரங்கன்குப்பம் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பழவேற்காடு, தோனிரவு, தத்தைமஞ்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி பணிகளை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பிரதாப் வியாக்கிழமை ஆய்வு செய்தாா். பொன்னேரி வட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்கும் பழவேற்... மேலும் பார்க்க