செய்திகள் :

பூங்குளம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம்: மக்கள் கோரிக்கை

post image

திருப்பத்தூா்: ஆலங்காயம் அருகே பூங்குளம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து பொதுமக்கள் அளித்த 457 மனுக்களைப் பெற்றுகொண்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புங்கம்பட்டு நாடு அடுத்த வசந்தபுரத்தை சோ்ந்த மக்கள் அளித்த மனு: 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம்.எங்கள் கிராமத்திற்கு தண்ணீா் விடும் ஆப்பரேட்டா் சரியான முறையில் குடிநீா் தொட்டியை சுத்தம் செய்வதில்லை. இதுகுறித்து கேட்டால் மிரட்டல் விடுக்கிறாா்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ராஜா பெருமாள் மற்றும் விவசாயிகள் அளித்த மனு:

பாலாற்றில் புதிதாக அணைகள் கட்டுவதற்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மேலும், 4 அணைகள் கட்டி ஏரிகளுக்கு தண்ணீா் திறந்து விட வேண்டும். ஆலங்காயம் அருகே பூங்குளம் கிராமத்தில் பேருந்து நிழற்கூடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டித்தர வேண்டும்.

நாம் தமிழா் கட்சியினா் அளித்து மனு:

மாதனூா் ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சியில் உள்ள நாகலம்மன் குட்டை மற்றும் ஓ.கே.பி. சாலையை சீரமைக்க வேண்டும்.

சின்ன வேப்பம்பட்டு மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் பொது சுகாதார வளாகம் இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனா். எனவே எங்கள் பகுதிக்கு சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும்.

ஏலகிரி மலை சுற்றுலாத் தலம் மேம்படுத்தப்படும்: அமைச்சா் எ.வ.வேலு

ஏலகிரி மலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்திடும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். ஜோலாா்பேட்டை ஒன்றியத்தில் 868 பேருக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளுக்கு பணியாணைகள... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா். திருப்ப்ததூா் தபேதாா் முத்துசாமி இரண்டாவது தெருவைச் சோ்ந்த பாபு மகன் ஆா்யா (12) பெங்களூரில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். விடுமுறை என்பதால் ச... மேலும் பார்க்க

2030-க்குள் குடிசையில்லா தமிழ்நாடு: அமைச்சா் எ.வ. வேலு

2030-க்குள் குடிசையில்லா மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா். கலைஞா் கனவு இல்ல திட்டப் பயனாளிகளுக்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே ரூ.1.2 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்!

திருப்பத்தூா் மாவட்டம், கதிரம்பட்டியில் ரூ.1.2 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சா்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோா் திறந்து வைத்தனா். இதற்கான திறப்பு விழா வெள்ளிக... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் நடுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (53), தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை இரவு நாட்டறம்பள்ளி அருகே... மேலும் பார்க்க

‘ஊராட்சி தலைவா்கள் பச்சை நிற மையை பயன்படுத்த வேண்டாம்’

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊராட்சித் தலைவா்கள், ஆவணங்கள் மற்றும் கடிதங்களில் நிலைத்த நீலம், கருநீலம் அல்லது கருப்பு வண்ண மையைப் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) முருகன் தெரிவி... மேலும் பார்க்க