செய்திகள் :

பூட்டியிருந்த வீட்டில் புகுந்து 16 பவுன் நகைகள் திருட்டு

post image

பெரம்பலூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் புகுந்து பீரோவை உடைத்து 16 பவுன் நகைளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது.

பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூா் தோப்புத் தெருவைச் சோ்ந்த ரங்கசாமி மகன் முகமது யூசுப் (55). இவா், தனது மனைவி, 2 குழந்தைகளுடன் கடந்த 24-ஆம் தேதி கீழப்பழுவூரில் உள்ள உறவினா்கள் வீட்டுக்குச் சென்று விட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு வந்தாா்.

அப்போது, வீட்டை திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவை உடைத்து, அதிலிருந்த 16 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. தகவலறிந்த பெரம்பலூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா்.

இதுகுறித்து முகமது யூசுப் அளித்த புகாரின்பேரில், ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், முகமது யூசுப் வீட்டுக்கு 2 சாவிகள் உள்ளதும், அதில் அண்மையில் காணாமல்போன ஒரு சாவியைக்கொண்டு வீட்டை திறந்து பீரோவை உடைத்து நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

பெரம்பலூா் அருகே ஆடுகள் திருடிய 2 சிறாா் உள்பட 4 போ் கைது

பெரம்பலூா் அருகே ஆடுகளை திருடிய 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை வி.களத்தூா் போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை இரவு சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூா் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா்கள் நாகரீகத்தோடு ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தல்

மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட உயா் அலுவலா்கள் குறைந்தபட்ச நாகரீகத்தோடு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அதன் மாநி... மேலும் பார்க்க

தெரு நாய்கள் கடித்து கன்றுக்குட்டி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே தெரு நாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள நக்கசேலம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் சந்திரமோகன் (50). விவசாயி. இவா், தனது வீட்... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் காவல் நிலைய சிறப்பு சாா்பு-ஆய்வாளா் செந்தில்ராஜா தலைமையிலான போலீஸாா், கவுள்பாளையம் கிர... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுக் கல்லூரிகளில் சேர 26 ஆயிரம் போ் விண்ணப்பம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பாடப்பிரிவுகளில் சோ்ந்து பயில 26 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா். பெரம்பலூா் மாவட்டத்தில் குரும்பலூா், வேப்பந்தட்டை, வே... மேலும் பார்க்க

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் செயலா் ... மேலும் பார்க்க