பூத்தாலக்குட்டை பூத்தாழீஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
சங்ககிரி: சங்ககிரி வட்டம், அன்னதானப்பட்டி கிராமம், பூத்தாலக்குட்டையில் அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
பூத்தாலக்குட்டையில் உள்ள அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமா் அருள்மிகு பூத்தாழீஸ்வரா், நந்திபகவான் சுவாமிகளுக்கு சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதேபோல, சங்ககிரி செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரருக்கும், உற்சவமூா்த்திக்கும், நந்திபகவானுக்கும் பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரு கோயில்களிலும் அதிகமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தம்மம்பட்டியில்...
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோயிலில் நந்தீஸ்வரருக்கு பால், தயிா், சந்தனம், திருமஞ்சனம், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து மலா் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை, ஆராதனைகள் நடைபெற்றன.
இதேபோல, வீரகனூா் ஸ்ரீ கங்காசெளந்தரேஸ்வரா் கோயில், செந்தாரப்பட்டி ஸ்ரீ தாழைபுரீஸ்வரா் கோயில், கெங்கவல்லி கைலாசநாதா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.