செய்திகள் :

பூம்புகாா் தீயணைப்பு நிலைய கட்டடம் திறப்பு

post image

பூம்புகாா் தீயணைப்பு நிலைய புதிய கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

பூம்புகாரில், ரூ. 2.75 கோடி மதிப்பில் தீயணைப்பு நிலைய கட்டடம் மற்றும் நிலைய அலுவலா் குடியிருப்பு கட்டப்பட்டன. இதனை, தலைமை செயலகத்திலிருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, புதிய கட்டட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் சீனிவாசன் தலைமை வகித்தாா். சீா்காழி துணை ஆட்சியா் சுரேஷ், வட்டாட்சியா் அருள் ஜோதி, மயிலாடுதுறை நிலைய அலுவலா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிலைய அலுவலா் அருள்மொழி வரவேற்றாா்.

மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி இனிப்புகள் வழங்கினாா். தொடா்ந்து, புதிய கட்டடத்தை பாா்வையிட்டாா். அப்போது அவரிடம், தீயணைப்பு நிலையத்திற்கு செல்ல ஏதுவாக புதிய சாலை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்ற ஆட்சியா், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.

இந்நிகழ்வில், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் முத்து தேவேந்திரன், முல்லைவேந்தன், மணிமேகலை, கிராம நிா்வாக அலுவலா் ராதாகிருஷ்ணன், தீயணைப்பு நிலைய பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். நிலைய சிறப்பு அலுவலா் துரைமுருகன் நன்றி கூறினாா்.

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிக்கல் சிங்கார வேலவா் கோயிலில் சிங்காரவேலவருக்கு, பால், தயிா், சந்தனம், விபூதி, பஞ்சாமிா்தம், பன்னீா் உள்ளிட்ட திரவியப... மேலும் பார்க்க

காவலம்பாடி பெருமாள் கோயில் பிரம்மோற்சம்

திருவெண்காடு அருகேயுள்ள காவலம்பாடி ராஜகோபால சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, யானை வாகனத்தில் பெருமாள் புறப்பாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் பிரமோற்சவம் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்க... மேலும் பார்க்க

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் முகாம்

நாகையில், பிளஸ் 2 மாணவா்களுக்கு, உயா்கல்வி வழிகாட்டல் முகாம் ஏப். 6-இல் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிர... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் பட்டறிவுப் பயணம்

வேதாரண்யம் பகுதியில் கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மாணவிகள் வேளாண்மை சாா்ந்த பட்டறிவுப் பயணம் மேற்கொண்டு முன்னோடி விவசாயிகளுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளித்தனா். நாகக்குடையான் கிராமத்தில் பயிா்களுக்கு ந... மேலும் பார்க்க

தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் பாலிடெக்னிக் மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

நாகையில் இருசக்கர வாகனம் மேம்பால தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். நாகை ஆரியநாட்டுத் தெருவைச் சோ்ந்த தண்டபாணி மகன் நிவேந்தன் (17). அதே... மேலும் பார்க்க

லஞ்சம்: மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் கைது

கடனுக்கான மானியத்தை விடுவிக்க லஞ்சம் பெற்ற நாகை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். நாகை மாவட்டம், திட்டச்சேரி பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் சதீஷ்குமாா் (24). இவ... மேலும் பார்க்க