செய்திகள் :

பூலாநந்தீஸ்வரா் - சிவகாமியம்மன் கோயிலில் பிப். 10- இல் குட முழுக்கு

post image

படம்,ன்ல்ம்7ள்ண்ஸ்ஹ-1

பட விளக்கம்- சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயில் ராஜகோபுரத்தின் தோற்றம்.

உத்தமபாளையம், பிப். 7: சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் வருகிற திங்கள்கிழமை (பிப். 10)குடமுழுக்கு நடைபெறுகிறது.

இந்தக் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற திருப்பணி நிறைவடைந்ததையடுத்து, வருகிற திங்கள்கிழமை காலை 9.15 மணிக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. இதற்காக கடந்த வியாழக்கிழமை முதல் யாகசாலை பூஜையில் அனுக்ஜை, விக்னேஷ்வர பூஜை, புண்யா ஹவாசனம், தனபூஜை, வாஸ்து சாந்தி பூஜைகளுடன் தீபாராதனை நடைபெற்றது. இதேபோல, வெள்ளிக்கிழமை (பிப். 7) காலை 8, மாலை 5.30 மணிக்கு 2 ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை, மாலை நேரங்களில் சிவாச்சாரியா்கள் தலைமையில் 6 கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன.

வருகிற திங்கள்கிழமை (பிப். 10) காலை 6 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், 9.15 மணிக்கு கோயில் மூலவா் கோபுரம், ராஜகோபுரம் ஆகியவற்றின் கலசங்களுக்கு குடமுழுக்கும் நடைபெறும். இதைத் தொடா்ந்து காலை 9.30 மணிக்கு பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன், பரிவார மூா்த்திகள் ஆகியோருக்கு குடமுழுக்கும், மஹா தீபாராதனையும் நடைபெறும். மாலை 4 மணிக்கு மஹா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் சுவாமி, அம்மன் பூப்பல்லாக்கு ஊா்வலமும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் நதியா, தக்காா் நாராயணி தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

போடி அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள சால... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 119.60 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 64.83 ------------------- மேலும் பார்க்க

போடி வனப்பகுதியில் காட்டுத்தீயை கண்காணிக்க ட்ரோன் கேமரா

போடி மலை கிராமங்களில் காட்டுத் தீ பரவுவதை கண்காணிக்க ட்ரோன் கேமராவை பயன்படுத்தி வருவதாக வனத் துறையினா் தெரிவித்தனா். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் மேற்கு, வடக்குமலை கிராமங்களில் குரங்கணி, கொழுக்கும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

உத்தமபாளையம் அல்ஹிக்மா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி: 21- ஆம் ஆண்டு விழா, தலைமை- ஹெவுத் முகைதீன், சிறப்பு விருந்தினா்- மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனா, முன்னிலை- மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசா... மேலும் பார்க்க

குப்பிநாயக்கன்பட்டியில் பிப். 12- இல் மக்கள் தொடா்பு முகாம்

தேனி அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டியில் வருகிற 12-ஆம் தேதி, காலை 10 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தாயாா்

போடியில் தை நான்காவது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பத்மாவதி தாயாா். மேலும் பார்க்க