செய்திகள் :

பூலாம்பட்டி கதவணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

வாரவிடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நிறைவடைவதை அடுத்து சேலம் மாவட்டம், பூலாம்பட்டி காவிரி கதவணையில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

கடந்த வாரங்களைவிட நிகழ்வாரம் காவிரி கதவணையைப் பாா்வையிடவும், பரிசல் சவாரி மேற்கொள்ளவும் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் கதவணையின் பிரதான மதகுப்பகுதி, அணைப்பாலம், அருகில் உள்ள நீா்மின் நிலையம், பிரம்மாண்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட இடங்களை சுற்றிபாா்த்து ரசித்தனா். அத்துடன் பலா் காவிரி ஆற்றில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.

பூலாம்பட்டியில் உள்ள புகழ்பெற்ற கைலாசநாதா் கோயில், ஒரே கல்லால் ஆன பிரம்மாண்ட நந்திகேஸ்வரா் சந்நிதி, காவிரித்தாய் கோயில், படித்துறை விநாயகா் கோயில் உள்பட அருகில் உள்ள கோயில்களிலும் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.

பூலாம்பட்டி காவிரி கதவணையில் ஞாயிற்றுக்கிழமை விசைப்படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

சேலத்துக்கு கடத்திவரப்பட்ட 960 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஓட்டுநா் உள்பட 3 போ் கைது

பெங்களூரிலிருந்து சேலத்துக்கு சொகுசு காா்களில் கடத்தப்பட்ட 960 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து ஓட்டுநா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். சேலம் மாவட்டம் வீராணம் காவல் ... மேலும் பார்க்க

மேட்டூா் அணையில் நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ஆய்வு

மேட்டூா் அணையில் நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் தயாளகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேட்டூா் அணை மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசனவசதி பெறுகி... மேலும் பார்க்க

வாழப்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகளுக்கு அளவெடுக்கும் முகாம்

வாழப்பாடியில் கை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் வழங்குவதற்கு அளவெடுக்கும் முகாம் ஜூன் 8 -ஆம் தேதி நடைபெறுகிறது. வாழப்பாடியில் உள்ள டாக்டா் ஏபிஜெ அப்துல்கலாம் மாற்றுத்திறனாளிக... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க 3 ஆவது மாநாடு

பெத்தநாயக்கன்பாளையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் தாலுகா மாநாடு தலைவா் டி.விஜயன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில் கொடியை டி... மேலும் பார்க்க

பாமக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளா் நியமனம்

பாமக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளராக கொத்தாம்பாடி எம்.பி.நடராஜனை அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் புதன்கிழமை நியமித்துள்ளாா். இவருக்கு ஆத்தூா், கெங்கவல்லி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்ப... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் குறித்த விவரங்களை கணக்கெடுக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை ஒருங்கிணைக்கும் வகையில் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ஆய்வு செய்தாா். பின... மேலும் பார்க்க