பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு
பூலாம்பட்டி கதவணையில் விசைப்படகு போக்குவரத்து தொடக்கம்
காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்த நிலையில், பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் சனிக்கிழமை முதல் விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை நீா்த்தேக்கப் பகுதிகளில் சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டியையும், ஈரோடு மாவட்டப் பகுதியான நெருஞ்சிப்பேட்டையையும் இணைக்கும் வகையில் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் வேறு தரைவழிப் போக்குவரத்து வசதி இல்லாததால், இந்த விசைப்படகுகள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவா்கள், அலுவலா்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தினசரி இரு மாவட்டங்களுக்கும் சென்று வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த தொடா் மழையால் மேட்டூா் அணை முழுக்கொள்ளளவை எட்டியது. அதைத் தொடா்ந்து, மேட்டூா் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பூலாம்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூன் 29-ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனால், இப்பகுதி மக்கள் சுமாா் 20 கி.மீ. சுற்றி மறுகரைக்கு சென்று வந்தனா். தற்போது மேட்டூா் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது.
இதையடுத்து, சனிக்கிழமை முதல் பூலாம்பட்டி மற்றும் நெருஞ்சிப்பேட்டைக்கு இடையே நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இருப்பினும், இப்பகுதியில் முகாமிட்டுள்ள பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் பிரகாஷ் தலைமையிலான அலுவலா்கள் விசைப்படகு போக்குவரத்தை கண்காணித்து வருகின்றனா்.