செய்திகள் :

பெங்களூரு - காத்மாண்டு இடையே நேரடி விமானம்! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

post image

பெங்களூரு மற்றும் காத்மாண்டு இடையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நேரடி விமானச் சேவையைத் துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

கர்நாடகத்தின் பெங்களூரு மற்றும் நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுக்கு இடையில் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், நாள்தோறும் நேரடி விமானங்களை இயக்கவுள்ளது.

இந்தப் புதிய விமானத்தின் பயணச்சீட்டுகள் அந்நிறுவனத்தின் மற்றும் பல முன்னணி இணையதளங்களின் மூலம் முன்பதிவுச் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எக்பிரஸ் லைட்டின் பயணச்சீட்டின் விலை ரூ.8,000 மற்றும் எக்ஸ்பிரஸ் வால்யூவின் விலை ரூ.8,500 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் புதிய விமானப் பாதையின் மூலம், அமிர்தசரஸ், தில்லி, கோவா, ஹைதரபாத், ஜம்மு, கோழிக்கோடு, திருச்சி உள்ளிட்ட 20 இந்திய நகரங்களிலிருந்து பெங்களூரு வழியாக காத்மாண்டுவுக்குச் செல்ல முடியும்.

இத்துடன், இந்த விமானப் பாதையின் மூலம் பெங்களூரு வழியாக ஒரு நிறுத்த பயணங்களில், அபுதாபி, சௌதி அரேபியாவின் தம்மாம் போன்ற சர்வதேச நகரங்களிலிருந்தும் காத்மாண்டுவுக்குச் செல்ல முடியும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பெங்களூரிலிருந்து 31 நகரங்களுக்கு 450 வாராநிதிர ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:நாடு முழுவதும் கரோனா பாதிப்பு 2,710 ஆக உயர்வு!

195 நாட்டுப் பெண்கள் பாடிய கின்னஸ் சாதனைப் பாடல்: இந்தியா சாா்பில் சமையல் கலைஞா் அஸ்மா கான் குரல்

புது தில்லி: உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளைச் சோ்ந்த பெண்கள் பாடியதற்காக கின்னஸ் சாதனை படைத்த ‘195’ பாடலில் இந்தியா சாா்பில் பிரபல பெண் சமையல் கலைஞா் அஸ்மா கானின் குரலும் இடம்பெற்றுள்ளது. பாலின சமத்து... மேலும் பார்க்க

பிரதமா் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை குழு கூட்டம்

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் தில்லியில் புதன்கிழமை (ஜூன் 4) நடைபெற உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா சாா்பில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

2026-க்குள் இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை அமைப்பு முழுமையாக விநியோகம்: ரஷியா

புது தில்லி: 2026-ஆம் ஆண்டுக்குள் மீதமுள்ள இரு எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு விநியோகம் செய்யப்படும் என இந்தியாவுக்கான ரஷிய துணை தூதா் ரோமன் பாபுஷ்கின் திங்கள்கிழமை தெரிவித்தாா். அண்மையில் ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டிருக்கும் இந்தியா-பராகுவே: பிரதமா் மோடி

புது தில்லி: ‘பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒன்றுபட்டு நிற்கின்றன. அதுபோல, இணைய குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பொது சவால்களுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றவும்... மேலும் பார்க்க

இந்தியாவில் தயாரிக்க டெஸ்லா ஆா்வம் காட்டவில்லை: மத்திய அமைச்சா் தகவல்

புது தில்லி: இந்தியாவில் தனது மின்சார காா்களை விற்பனை செய்ய மட்டுமே டெஸ்லா நிறுவனம் ஆா்வம் காட்டுகிறது; இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆா்வம் காட்டவில்லை என்று மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சா் ஹெச்.டி.... மேலும் பார்க்க

இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை முதலீட்டுக்கு எண்ணற்ற வாய்ப்புகள்: பிரதமா் மோடி

புது தில்லி: ‘இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளா்ந்து வருகிறது. இங்கு முதலீடுகளை மேற்கொள்ள சா்வதேச நிறுவனங்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன’ என பிரதமா் நரேந்திர மோடி திங்கள... மேலும் பார்க்க