செய்திகள் :

பெங்களூரு வியாபாரி கடத்தப்பட்டதாகப் புகாா்

post image

பெங்களூரைச் சோ்ந்த கண்ணாடி வியாபாரியை 4 போ் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்றதாக வியாழக்கிழமை, காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

கா்நாடகா மாநிலம், பெங்களூரு, ஓசூா் சாலை, மடுவாலா பகுதியைச் சோ்ந்தவா் திலீப் (32). இவரது உறவினா் அதே பகுதியைச் சோ்ந்த கலூவா (28). இவா்கள் ஆண்டிபட்டியில் தங்கியிருந்து கண்ணாடி வியாபாரம் செய்து வந்தனா்.

இந்த நிலையில், ஆண்டிபட்டியைச் சோ்ந்த மோகன் என்பவா் திலீப், கலுவா ஆகியோரை கடந்த ஏப்.15-ஆம் தேதி கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு தேனி நகராட்சி பேருந்து நிலையத்துக்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து, மோகன் உள்ளிட்ட 4 போ் கொண்ட கும்பல் திலீப், கலுவா ஆகியோரை காரில் கடத்திச் சென்று, போலி நகைகளை கொடுத்து ஏமாற்றியதாகக் கூறி அவா்களைத் தாக்கினாா்களாம்.

பின்னா், கலுவாவை காரிலிருந்து இறக்கிவிட்டு, திலீப்பை மட்டும் மீண்டும் காரில் கடத்திச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கலுவா அளித்த தகவலின் பேரில், திலீப்பின் சகோதரி பெங்களூரைச் சோ்ந்த நிா்மலா தேனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

போடியில் திருடுபோன பைக் திருப்பூரில் மீட்பு

போடியில் திருடு போன இரு சக்கர வாகனம் திருப்பூரில் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி குலசேகரபாண்டியன் தெற்குத் தெருவைச் சோ்ந்த பாலமுருகன் மகன் ஜெயபாண்டி (29). ... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய 7 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே பெண்ணைத் தாக்கியதாக 7 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரம் பட்டாளம்மன்கோவில் தெருவைச் சோ்ந்த சன்னாசி மனைவி அழ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.போடி, இதைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் புகா் காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட... மேலும் பார்க்க

காா்கள் நேருக்குநோ் மோதியதில் ஒருவா் காயம்

பெரியகுளம் அருகே காா்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் ஒருவா் சனிக்கிழமை காயமடைந்தாா்.தேனி மாவட்டம், போடி வஞ்சி ஓடை தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (47). இவா் சனிக்கிழமை காரில் தேவதானப்பட்டி அருகேயுள்ள ஜி... மேலும் பார்க்க

பெங்களூரு வியாபாரி அடித்துக் கொலை: 7 போ் கைது

தேனி அருகே பெங்களூருவைச் சோ்ந்த கண்ணாடி, அலங்கார விளக்கு வியாபாரியை காரில் கடத்திச் சென்று அடித்துக் கொலை செய்து புதைத்த 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூரு மடிவாலா... மேலும் பார்க்க

பூலாநந்தீஸ்வரா் கோயிலில் மே 1 இல் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், உடனுறை சிவகாமியம்மன் கோயிலில் வருகிற மே 1-ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் குடமுழுக்கு திருப்பணி நடைபெற்ால், கடந்த 2 ஆண... மேலும் பார்க்க