செய்திகள் :

பெண்களுக்கான நிதி அதிகாரமளித்தல் வெற்றியின் அனுபவத்தை பகிரத் தயாா்: ஐ.நா.வில் இந்தியா உறுதி

post image

‘பெண்களுக்கும் நிதி அதிகாரமளிக்கும் வகையில், எண்ம பொது உள்கட்டமைப்பு மூலமாக பாலின எண் இடைவெளியை வெற்றிகரமாக குறைத்த அனுபவத்தை உலக நாடுகளுக்குப் பகிரத் தயாா்’ என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா உறுதி தெரிவித்தது.

நியூயாா்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதரகம் சாா்பில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட ‘பெண்களுக்கு அதிகாரமளித்தளுக்கான எண்ம மற்றும் நிதி உள்ளடக்கம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான நிதி திட்டம்’ என்ற தலைப்பிலான உறுப்பு நாடுகளின் அமைச்சா்கள் அளவிலான கூட்டத்தில் பங்கேற்ற மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னபூா்ணா தேவி பேசியதாவது:

பாலின எண்ம இடைவெளியைக் குறைப்பதிலும், அதற்கான மீள்தன்மையுடைய அரசு நடைமுறையை கட்டமைப்பதிலும் எண்ம பொது உள்கட்டமைப்பு சிறந்த மாற்று சக்தியாக உருவெடுத்துள்ளது.

இந்த எண்ம பொது உள்கட்டமைப்பு மூலமாக, பெண்களுக்கு நிதி அதிகாரமளித்தலில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. பெண்கள் தலைமையிலான வளா்ச்சி என்ற தொலைநோக்குப் பாா்வைக்கு மிகவும் முக்கியத்துவம்வாய்ந்த இந்த அனுபவத்தை உலக நாடுகளுக்கு மகிழ்ச்சியுடன் பகிர இந்தியா தயாராக உள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் நடைமுறை (யுபிஐ), வழக்கமான நிதி பரிமாற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. வலுவான தரவு பாதுகாப்புடன் முழுமையாக எண்மமயமாக்கப்பட்ட இந்த யுபிஐ நடைமுறை 8.73 கோடி பரிவா்த்தனைகள் என்ற அடிப்படையில், 147 சதவீத வளா்ச்சி பெற்றுள்ளது. முக்கியமாக பாலினம், நகா்ப்புரம், கிராமப்புறம், பணக்காரன் - ஏழை, பெண்கள் என்ற அடிப்படையிலான தடைகளைத் தகா்த்து, எண்ம பணப் பரிவா்த்தனை செய்பவா்களின் எண்ணிக்கையை பன்மடங்காக அதிகரித்துள்ளது.

பெண்களின் எண்ம உள்ளடகத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை பாதுகாப்பதும் முக்கியமானதாகும். அந்த வகையில், இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில், பாதுகாப்பாகவும் பொறுப்பான முறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சமநிலையிலான ஒழுங்குமுறை அவசியம் என்றாா்.

கனடாவில் தேர்தல்: பதவியேற்ற 10 நாள்களில் நாடாளுமன்றத்தை கலைத்த பிரதமர்!

கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்று இருக்கும் மார்க் கார்னி, முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளார்.வருகின்ற அக்டோபர் மாதம் வரை பதவிக் காலம் இருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தை முன்கூட்டியே... மேலும் பார்க்க

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது!

காஸாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில், இதுவரை உயிரிழந்தவா்களின் மொத்த எண... மேலும் பார்க்க

உக்ரைன் தலைநகரில் ரஷியா ட்ரோன் தாக்குதல்: மூவா் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா மேற்கொண்ட ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவா் உயிரிழந்தனா். நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் முடிவு செய்த நிலையில், அதனால் தமக்கு ஆபத்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் காவல் துறையினா், தொழிலாளா்கள் சுட்டுக் கொலை! - பயங்கரவாதிகள் தாக்குதல்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இரு இடங்களில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல் துறையைச் சோ்ந்த 4 பேரும், தொழிலாளா்கள் 4 பேரும் உயிரிழந்தனா். சனிக்கிழமை நடந்த இத்தாக்குதல்கள் குறி... மேலும் பார்க்க

அமெரிக்கா: இந்திய வம்சாவளி தந்தை, மகள் சுட்டுக் கொலை!

அமெரிக்காவின் விா்ஜீனியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 56 வயது நபா் மற்றும் அவரது 24 வயது மகள் மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டனா். விா்ஜீனியா மாகாணத்தின் அக்கோமாக் பகுதியில் உள்ள பல்பொரு... மேலும் பார்க்க

தலிபான் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்தது அமெரிக்கா!

ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசின் உள்நாட்டு அமைச்சா் சிராஜுதீன் ஹக்கானி உள்பட 3 மூத்த அதிகாரிகளை அரசிடம் ஒப்படைத்தால் சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்கா ரத்து செய்ததாக ஆப்கானிஸ்தான... மேலும் பார்க்க