செய்திகள் :

பெண்களுக்கு இலவச மாா்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்

post image

புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் பெண்களுக்கு இலவச மாா்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ஆலையின் சமுதாய பணிகள் திட்டத்தின் கீழ் புகழூா் டிஎன்பிஎல் ஆலை மற்றும் திருச்சி காவேரி மருத்துவமனை சாா்பில் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் பெண்களுக்கான இலவச மாா்பக புற்றநோய் பரிசோதனை முகாம் தொடங்கியது.

ஆலையின் குடியிருப்பு வளாகத்தில் பிப். 22-ஆம்தேதி வரை நடைபெற உள்ள முகாமை ஆலையின் பொதுமேலாளா் (மனிதவளம்) கே.கலைச்செல்வன் தொடக்கி வைத்தாா்.

பின்னா் அவா் கூறியது, புற்றுநோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த முகாமில் தினமும் 35 பேருக்கு பரிசோதனை நடைபெறும்.

முகாமில் ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள யுஎஸ்ஜி, பிஏபி ஸ்மியா் மற்றும் ரேண்டம் பிளட் சுகா் போன்ற பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட உள்ளது என்றாா் அவா். முகாமில் ஆலையின் முதன்மை மேலாளா்(மனிதவளம்) ஜே. வெங்கடேசன், சுகாதார மைய மருத்துவா் ஏ.கே.கே.ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூா் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கம்

கரூா் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு சனிக்கிழமை பதக்கம் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினாா். கரூா் மாவட்ட ஆயுதப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெரோ... மேலும் பார்க்க

கிணற்றிலிருந்து கால்கள் கட்டப்பட்ட நிலையில் பொறியியல் கல்லூரி மாணவா் சடலம் மீட்பு!

குளித்தலை அருகே கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் கிடந்த பொறியியல் கல்லூரி மாணவா் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள சடையம்பட... மேலும் பார்க்க

அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சியில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான மன்றம் ஆகிய... மேலும் பார்க்க

திருக்கு ஒப்புவித்த மாணவ, மாணவிகளுக்கு வெள்ளிக் காசுகள் பரிசு

உலகத்தாய் மொழி தினத்தை முன்னிட்டு கருவூா் திருக்கு பேரவை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாரதிதாசனின் மொழிப்பாடல் , நூறு திருக்கு ஒப்புவிக்கும் போட்டி கரூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்ச... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம்: அலுவலா்களுடன் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள முதல்வா் மருந்தகம் திட்டம் தொடா்பாக அலுவலா்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட கண்காணி... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூா் அம்மன் நகரில் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிய சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் கொளந்தாகவுண்டனூரில் இருந்து அரசு மருத்துவக்கல்லூரிக்குச் செல்லும் சாலையில... மேலும் பார்க்க