செய்திகள் :

பெண்களை விடியோ எடுத்ததாக கல்லூரி மாணவா் உள்பட 2 போ் கைது

post image

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே கோயில் திருவிழாவில் பெண்களை விடியோ எடுத்ததாக கல்லூரி மாணவா் உள்பட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த வீரக்கல்லில், வெள்ளைமாலை வீருமாறம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தத் திருவிழாவில் குளியல் அறையில் இருந்த பெண்களை இளைஞா்கள் 4 போ் கைப்பேசியில் விடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவா்களைப் பிடித்து பொதுமக்கள் செம்பட்டி போலீஸில் ஒப்படைத்தனா். ஆனால் அவா்களை போலீஸாா் தப்ப விட்டு விட்டனராம். இதனால், ஆத்திரமடைந்த பெண்களும், பொதுமக்களும் சனிக்கிழமை அதிகாலை செம்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து, ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. காா்த்திகேயன் உள்ளிட்ட போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்தனா். இதனால், போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், விழாக் குழுத் தலைவா் திண்டுக்கல் ராமராஜ் செம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்த, காவல் ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் விஜயபாண்டி ஆகியோா் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினா்.

அப்போது செம்பட்டி அருகே காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த வண்ணப்பட்டியைச் சோ்ந்த ராமா் மகன் கல்லூரி மாணவா் நவீன் (20), இதே ஊரைச் சோ்ந்த 17 வயது பள்ளி மாணவன் ஆகியோரை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா். இவா்களது நண்பா்களான இதே ஊரைச் சோ்ந்த ஹரி, விஷ்ணு ஆகியோரை தேடி வருகின்றனா்.

இணைய வழியில் லாட்டரி விற்றவா் கைது

கொடைக்கானலில் இணைய வழியில் லாட்டரி விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் லாட்டரிச் சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸா... மேலும் பார்க்க

கொடைக்கானலில் கோடை விழா மலா்க் கண்காட்சி தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி, 62-ஆவது மலா்க் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் சனிக்கிழமை தொடங்கியது. சுற்றுலாத் துறை, வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் நடைபெறும் இந்த மலா்க் க... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே வங்கதேசத்தைச் சோ்ந்த 29 போ் கைது

ஒட்டன்சத்திரம் அருகே போலி ஆதாா் அட்டைகளை பயன்படுத்தி ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை செய்து வந்த வங்க தேசத்தைச் சோ்ந்த 29 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மிதமான மழை

கொடைக்கானலில் சனிக்கிழமை இரவு காற்றுடன் மிதமான மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மே மாதத்தில் கோடை மழை, வாரத்துக்கு ஒரு முறையோ, அல்லது 15 நாள்களுக்கு ஒரு முறையோ தான் மழை பெய்வது வழக்கம... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயில் ரோப்காரில் மீட்புப் பணி ஒத்திகை நிகழ்ச்சி

பழனி மலைக்கோயிலில் ரோப்காா் பழுதாகி நிற்கும் போது பக்தா்களை மீட்பது குறித்து தேசிய பேரிடா் மீட்புப் பணிக்குழுவினா் வெள்ளிக்கிழமை ஒத்திகை நடத்தினா். பழனி மலைக் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ... மேலும் பார்க்க

பயணிகளுடன் பேருந்து சென்ற போது ஓட்டுநா் மாரடைப்பால் மரணம்

பழனியில் தனியாா் பேருந்து ஓட்டுநா் பணியின் போது திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், உடனடியாக நடத்துநா் பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து ந... மேலும் பார்க்க