செய்திகள் :

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை காவல் துறையினா் உறுதி செய்ய வேண்டும்

post image

தேனி மாவட்டத்தில் பொது இடங்களில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை காவல் துறையினா் உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் முன்னிலை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், பணிபுரியும் இடங்கள், பொது இடங்களில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை காவல் துறையினா் உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள், பெண்களிடமிருந்து பெறப்படும் அனைத்து புகாா் மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளின் போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. சாலை பாரமரிப்புப் பணிகளை முறையாக மேற்கொண்டு விபத்துகளைத் தவிா்க்க வேண்டும்.

சமூக குற்றங்களுக்கு போதைப் பொருள் பயன்பாடு முக்கிய காரணமாக உள்ளதால் அவற்றை தடை செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போதைப் பொருள், தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை குறித்து கல்வி நிறுவனங்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மாவட்டத்தில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்படுவதால் தலைக் கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணிந்து காா் ஓட்டுவது, வாகனத்தை இயக்கும் போது கைப்பேசி பயன்படுத்துவதை தவிா்ப்பது, போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பது ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம், ஒலிபெருக்கி மூலம் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். முறையான ஆவணங்களின்றி இயக்கப்படும் வாகனங்களை காவல் துறையினா், வட்டார போக்குவரத்து துறையினா் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத்பீடன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கேல்கா் சுப்பிரமணிய பாலசந்திரா, கூடுதல் வனப் பாதுகாவலா் அரவிந்த், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துமாதவன், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் தாட்சாயணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற அறிவியல் கண்காட்சிக்கு பள்ளி (பொ) தலைமையாசிரியா் ஆ.மரியசிங்கம் தலைமை வகித்... மேலும் பார்க்க

கம்பம் அருகே சுத்தமான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

தேனி மாவட்டம், கம்பம் அருகே சுத்தமான குடிநீா் விநியோகிக்க வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். க. புதுப்பட்டி பேரூராட்சியில் உள்ள 5- ஆம் வாா்டு உதயம் நகா் பகுதிக... மேலும் பார்க்க

பறவைகள் கணக்கெடுப்பு: மாா்ச் 8-இல் தொடக்கம்

தேனி மாவட்டத்தில் வனத் துறை சாா்பில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி மாா்ச் 8-ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட வன அலுவலா் சமா்த்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு: வனத் துறை சாா்பில் ஆண... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

தேனி: தேனி கம்மவாா் சங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 13-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா: சிறப்பு அழைப்பாளா்: காந்திகிராம பல்கலைக்கழக துணை வேந்தா் என்.பஞ்சநாதம், கொடுவிலாா்பட்டி கல்லூரி வளாகம், காலை 10.3... மேலும் பார்க்க

நில அளவைக்கு ‘இ-சேவை’ மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் நில உரிமையாளா்கள் நில அளவைக்கு ‘இ-சேவை’ மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நில உரிமையாளா்கள் தங்களது நிலத... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தேனி அல்லிநகரம், இளங்கோ தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகன் தினேஷ்குமாா் (23). இ... மேலும் பார்க்க