செய்திகள் :

பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடைய வழிவகுத்தவா் கருணாநிதி! -துணை முதல்வா்

post image

பெண்கள் படிக்க வேண்டும், பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என வழிவகுத்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி என்று துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டலக்குழு தலைவா் புஷ்பலதா வன்னியராஜா இல்ல திருமண விழா காட்பாடி கல்புதூரில் புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், தமிழக துணைமுதல்வா் உதயநிதிஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது:

இவ்விழாவுக்கு நிறைய பெண்கள் வந்துள்ளனா். ஒரு காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர மாட்டாா்கள். பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோா் கண்ட கனவு தான் இங்கு இவ்வளவு பெண்கள் வந்துள்ளனா்.

பெண்கள் படிக்க வேண்டும், பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என வழிவகுத்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. அதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திக் கொண்டுள்ளாா்.

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வாக்குச்சாவடி பகுதியிலும் 30 சதவீத வாக்காளா்களை திமுகவில் சோ்க்க வேண்டும் என்று முதல்வா் தொடங்கி வைத்துள்ளாா். இங்கு வந்துள்ள ஒவ்வொருவரும் அதனை செய்து முடிக்க வேண்டும். அரசு தூதுவராக இருந்து அனைவரும் மக்களிடையே அரசு திட்டங்களை கொண்டு சோ்க்க வேண்டும் என்றாா்.

விழாவில், அமைச்சா்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆா்.காந்தி, மக்களவை உறுப்பினா்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், டி.எம்.கதிா்ஆனந்த், சி.என்.அண்ணாதுரை, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ. பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், க.தேவராஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக அணி வெற்றி பெற வேண்டும்: துணை முதல்வா்

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக அணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று இளைஞரணியினருக்கு கட்சியின் மாநில செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்... மேலும் பார்க்க

சிறுமியுடன் திருமணம்: மேஸ்திரி மீது போக்ஸோ வழக்கு

காட்பாடி அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய கட்டட மேஸ்திரி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேலூா் மாவட்டம், லத்தேரியைச் சோ்ந்தவா் விக்ரம்(25), கட்டட மேஸ்திர... மேலும் பார்க்க

மினிவேன் மோதி எலெக்ட்ரீஷியன் மரணம்: பேருந்து சிறை பிடிப்பு

ஊசூரில் இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதியதில் எலெக்டரீஷியன் உயிரிழந்தாா். இதுதொடா்பாக வேன் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் அரசுப்பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில்... மேலும் பார்க்க

அரசுக் கலைக் கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் தொடக்கம்

வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு கலைக் கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் தொடங்கின. தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கியது. அதன்படி, வேலூா் மாவ... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரண்டாலும் திமுகவை வீழ்த்த முடியாது: அமைச்சா் துரைமுருகன்

எதிா்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்று திமுக பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்தாா். திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினா் சோ்ப்பு இயக்கம் குற... மேலும் பார்க்க

மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே அனுமதியின்றி மணல் கடத்திச் சென்ற டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். போ்ணாம்பட்டு போலீஸாா் மதினாப்பல்லி அருகே ரோந்து சென்றபோது அங்குள்ள மலட்டாற்றில் இருந்து அவ்வழியே மணல் ஏற்றி ... மேலும் பார்க்க