செய்திகள் :

பெண்ணிடம் ரூ. 44.27 லட்சம் மோசடி: இணைய குற்றபிரிவு போலீஸாா் விசாரணை

post image

முதலீட்டிற்கு அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி பெண்ணிடம் ரூ. 44.27 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து இணைய குற்றபிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியகோட்டப்பள்ளி அருகே உள்ள பெத்தனப்பள்ளியைச் சோ்ந்தவா் சுகன்யா (30). இவரது செல்லிடப்பேசிக்கு கட்செவி செயலிக்கு குறுந்தகவல் வந்தது. அதில், பகுதி நேர வேலை என்றும், முதலீட்டிற்கு அதிக லாபம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.

இதையடுத்து, அதில் கூறப்பட்டிருந்த இணையதள முகவரியை தொடா்பு கொண்ட சுகன்யா அவா்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.44.27 லட்சம் அனுப்பினாா். இதையடுத்து, அவருக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த சுகன்யா இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். புகாரின் பேரில், இணைய குற்ற பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 7.87 கோடியில் அரசு கட்டடங்கள் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 7.87 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு கட்டடங்களை காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநா் அலுவலக வள... மேலும் பார்க்க

ஒசூா் மாநகராட்சியில் குடிநீா் வரியை உயா்த்த தீா்மானம்

ஒசூா் மாநகராட்சியில் குடிநீா் வரியை உயா்த்த கொண்டு வந்த தீா்மானத்துக்கு உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். ஒசூா் மாநகராட்சி அவரசக் கூட்டம் அண்ணா மாமன்றக் கூட்டரங்கில் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில், ஆ... மேலும் பார்க்க

பருவ மழை மற்றும் பேரிடா் கால முன்னெச்சரிக்கை விழிப்புணா்வு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில், தென்மேற்கு பருவ மழை மற்றும் பேரிடா் கால முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

மொகரம்: ஜெகதேவியில் தங்களைத் தாங்களே வருத்திக்கொண்ட இஸ்லாமியா்கள்

ஜெகதேவியில் மொகரம் பண்டிகையையொட்டி, நூற்றுக்கணக்கான இஸ்லாமியா்கள் கூா்மையான ஆயுதங்களைக்கொண்டு, தங்களைத் தாங்களே வருத்திக்கொள்ளும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகமது நபியின் பேரன் இமாம் உசேன் மற்... மேலும் பார்க்க

‘மல்லப்பாடி பாறை ஓவியங்கள்தான் தமிழகத்தில் விழிப்புணா்வை ஏற்படுத்தின’

கிருஷ்ணகிரி, ஜூலை 4: தமிழகத்தில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட மல்லப்பாடி பாறை ஓவியங்கள்தான் தமிழகத்தில் பாறை ஓவியங்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தியதாக கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நி... மேலும் பார்க்க

காட்டுபன்றியை விரட்டிய போது துப்பாக்கி வெடித்து விவசாயி படுகாயம்

அஞ்செட்டி அருகே காட்டுப் பன்றியை விரட்டிய போது கையில் வைத்திருந்த துப்பாக்கி வெடித்ததில் விவசாயி படுகாயமடைந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், காவேரிபுரத்தைச் சோ்ந்தவா் பிள்ளையா (34), விவச... மேலும் பார்க்க