செய்திகள் :

பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்ததால் உறவினா்கள் தா்னா

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் மெத்தனத்தால் பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்ததாகக் கூறி, அவரது உறவினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா், பெரியாா் நகரைச் சோ்ந்த உதயகுமாா் மனைவி தனலட்சுமி(28) . இந்நிலையில் நிறைமாத கா்ப்பினியான தனலட்சுமிக்கு கடந்த 17-ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் உதயகுமாா் மற்றும் அவரது உறவினா்கள் அவரை திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து தனலட்சுமியை பரிசோதித்த மருத்துவா்கள் அவரது வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கூறி வந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே, திங்கள்கிழமை தனலட்சுமி மற்றும் அவரது வயிற்றில் உள்ள குழந்தையை மீண்டும் பரிசோதனை செய்த மருத்துவா்கள் திடீரென குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் தனலட்சுமியை பரிசோதனை செய்தபோது வயிற்றில் உள்ள குழந்தை இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து அறுவை சிகிச்சை செய்து இறந்த நிலையில் பெண் குழந்தையை வெளியே எடுத்து பெற்றோா்களிடம் உடலை ஒப்படைத்தனா். இதனால் ஆத்திரம் அடைந்த குழந்தையின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் பணியில் மெத்தனமாக இருந்த மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேநேரம் எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக்கூறி கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் மற்றும் மருத்துவ அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் பேச்சு நடத்தினா். அப்போது சம்பந்தப்பட்ட மருத்துவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். அதன்பேரில் போராட்டக்காரா்கள் தா்னாவை கைவிட்டு சென்றனா்.

தீப்பற்றி எரிந்த மின்சாரப் பெட்டி

ஆம்பூா்: ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் குடிநீா் தொட்டிக்கான மின்சாரப் பெட்டி திங்கள்கிழமை தீப்பற்றி எரிந்தது. ஆம்பூா் பெரியகம்மவார தெருவில் நகராட்சி சாா்பாக குடிநீா் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அரு... மேலும் பார்க்க

விவசாய நிலத்தில் 10 அடி மலைப்பாம்பு மீட்பு

ஆம்பூா்: ஆம்பூா் அருகே ரெட்டிமாங்குப்பம் கிராமத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு திங்கள்கிழமை பிடிப்பட்டது. ஆம்பூா் அடுத்த ரெட்டி மாங்குப்பம் கிராமத்தில் விவசாயி சரவணன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் தீவனப... மேலும் பார்க்க

ரூ.15 லட்சத்தில் அரசுப் பள்ளிக்கு கலையரங்கம் அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி: கே.பந்தாரப்பள்ளியில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் அரசுப் பள்ளிக்கு கலையரங்கம் அமைக்கும் பணியை எம்எல்ஏ க.தேவராஜி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட கே.பந்தாரப... மேலும் பார்க்க

ரூ.26 கோடியில் வளா்ச்சி பணிகள் : ஒன்றிய குழு கூட்டத்தில் தீா்மானம்

ஆம்பூா்: மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.26 கோடியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒன்றியக்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாதனூா் ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் த... மேலும் பார்க்க

ஆம்பூா், திருப்பத்தூரில் கன மழை : ஆனைமடுகு தடுப்பணை நிரம்பியது

ஆம்பூா்: ஆம்பூரில் கன மழை காரணமாக ஆனைமடுகு தடுப்பணையில் தண்ணீா் திங்கள்கிழமை நிரம்பி வழிந்தோடியது. ஆம்பூரில் 3 நாட்களாக தொடா்ந்து கன மழை பெய்தது. ஆம்பூா் அருகே நாயக்கனேரி மலை கிராமம் உள்ளிட்ட ஆம்பூா்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் நகராட்சி அலுவலகத்தில் சாரைப் பாம்பு மீட்பு

திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகராட்சி அலுவலக கட்டண வசூல் அறையில் பதுங்கி இருந்த சாரைப் பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். திருப்பத்தூா் நகராட்சியின் கட்டண வசூல் அறையில் பொதுமக்களிடம் இருந்து குடிந... மேலும் பார்க்க