செய்திகள் :

பெண் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை; காவல் அதிகாரி கைது!

post image

உத்தரப் பிரதேசத்தில் பெண் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை அளித்த உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தில் மகோரா காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவுப் பணியின்போது, உதவி ஆய்வாளரான மோகித் ராணா பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறி, மூத்த காவல் கண்காணிப்பாளரிடம் பெண் உதவி ஆய்வாளர் புகார் அளித்தார்.

மேலும், தன்னிடம் ஆபாசப் படங்களைப் பார்க்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதனடிப்படையில், மோகித்திடம் விசாரணை மேற்கொண்டபோது, தப்பிக்க முயன்றதோடு, ஆதாரங்களை அழிக்கும் நோக்கில், ஆபாசப் படங்கள் இருந்த தனது ஸ்மார்ட்வாட்ச் மற்றும் மொபைல் போனையும் மோகித் வெளியே வீசி எறிந்தார்.

இதையும் படிக்க:ஏப். 1 முதல் யுபிஐ சேவை நிறுத்தம்!

இருப்பினும், மோகித்திடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பெண் உதவி ஆய்வாளரின் பாலியல் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால், அவரை கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மோகித்தின் மொபைல் போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்சை தேடும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

உ.பி.: நிலத்தகராறில் கோழியைக் கொன்ற இருவர் மீது வழக்கு

உத்தரப் பிரதேசத்தில் நிலத்தகராறில் கோழியைக் கொன்றதாக இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம், கர்மல்பூர் கிராமத்தில் நிலத்தகராறில் தனது கோழியை செங்கற்கள் மற்றும் கற்களால் த... மேலும் பார்க்க

தெலங்கானாவில் திடீரென வெடித்த குப்பைத் தொட்டி- தூய்மைப் பணியாளர் பலி

தெலங்கானாவில் குப்பைத் தொட்டியில் இருந்து திடீரென மர்மபொருள் வெடித்ததில் தூய்மை பணியாளர் பலியானார். தெலங்கானா மாநிலம், குசாய்குடா பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் இருந்து குப்பைகளை அகற்... மேலும் பார்க்க

கணவருடன் விவாகரத்து! 11 வயது மகனை கழுத்தறுத்து கொன்ற தாய்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் 11 வயது மகனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய் ஒருவர் கத்தியால் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில், அவரின் மே... மேலும் பார்க்க

அகர்தலா ரயில் நிலையத்தில் 75.5 கிலோ கஞ்சா பறிமுதல்

அகர்தலா ரயில் நிலையத்தில் 75.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலம், அகர்தலா ரயில் நிலையத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் அதிகாரிகள் வழக்க... மேலும் பார்க்க

பாட்னாவில் மருத்துவமனை இயக்குநர் சுட்டுக்கொலை

பாட்னாவில் மருத்துவமனை இயக்குநர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார், பாட்னாவில் ஆசியா மருத்துவமனை இயக்குநர் சுர்பி ராஜ் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் அதிகாரி அதுலேஷ் ஜா சன... மேலும் பார்க்க

120 அடி உயர 2 தேர்கள் கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!

ஒசூர் அருகே உஸ்கூர் மத்துரம்மா கோயில் தேர்த் திருவிழாவில் 2 தேர்கள் கவிழ்ந்ததில், இருவர் பலியான நிலையில் 10 பேர் படுகாயமடைந்தனர். கர்நாடக மாநிலம், உஸ்கூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மத்... மேலும் பார்க்க