செய்திகள் :

பலூச் ஆர்வலர்களின் போராட்டத்தில் பாக். படையினர் துப்பாக்கிச் சூடு?

post image

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

பலூசிஸ்தானில் பாதுகாப்புப் படையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டு மாயமாக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் மற்றும் பலூச் யாக்ஜெஹ்தி ஆணையம் எனும் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தோர் லாஸ்பெலா பகுதியில் முகாமிட்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இன்று (மார்ச் 23) அதிகாலை அவர்களது முகாமினுள் நுழைந்த பாகிஸ்தான் காவல் துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் அவர்களது கூடாரங்களை அகற்றி அங்கு திரண்டிருந்த மக்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசியும் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: உக்ரைன்: ரஷிய டிரோன்களின் தாக்குதலில் குழந்தை உள்பட 3 பேர் பலி!

முன்னதாக, நேற்று (மார்ச் 22) உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பலூச் யாக்ஜெஹ்தி ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளரான மஹ்ராங் பலூச் என்பவரை பாகிஸ்தான் படைகள் கைது செய்தனர்.

பாகிஸ்தான் முழுவதும் மனித உரிமை அமைப்புகள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் பலூச்சிற்கு ஆதரவாக திரண்டு, அமைதியான முறையில் போராட்டம் நடத்தி நீதி தேடுபவர்கள் துன்புறுத்துப்படுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இத்துடன், கைது செய்யப்பட்ட மஹ்ரங் பலூச் மற்றும் அவரது கூட்டாளிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால், அங்கு நிலைமை தொடர்ந்து பதட்டமாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல்: கடைசி ஓவரில் தில்லி கேபிடல்ஸ் த்ரில் வெற்றி!

விசாகப்பட்டினம்: நடப்பு ஐபிஎல் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயித்த 210 ரன்கள் இலக்கைதில்லி கேபிடல்ஸ் 19.3 ஓவர்களில் எட்டி முதல் வெற்றி... மேலும் பார்க்க

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வா? - அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச... மேலும் பார்க்க

டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம்: விக்ரமராஜா

சேலம் : டி-மார்ட் போன்ற நிறுவனங்களை தடை செய்யாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். சேலம் ... மேலும் பார்க்க

அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தோ்தல் அதிகாரி நாளை ஆலோசனை

சென்னை: தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மாா்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளாா்.த... மேலும் பார்க்க

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்: விஜய்

சென்னை: பழைய ஓய்வூதியத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம... மேலும் பார்க்க

ஏப். 6-ல் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதல்வா் திறந்து வைக்கிறாா்!

நீலகிரி: நாட்டிலேயே முதன் முறையாக பழங்குடியினா்களுக்கு என 50 படுக்கை வசதிகளுடன், மலை பிரதேசத்தில் அதிநவீன 700 படுக்கைகள் கொண்ட உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை ஏப்ரல் 6 ஆம் தேதி முதல்வர் மு.க.... மேலும் பார்க்க