செய்திகள் :

பெண் கொலை வழக்கில் வேன் ஓட்டுநருக்கு ஆயுள் சிறை

post image

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் ஆம்னி வேன் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்கள்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மு. மணிகண்ட ராஜா (42). ஆம்னி வேன் ஓட்டுநா். இவருக்கு, மனைவி, 2 குழந்தைகள் உள்ள நிலையில், சூரங்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்த மனோஜ்குமாா் மனைவி வள்ளித்தாய் (எ) வசந்தா ( 25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடன் பிரச்னையால் சிக்கிய மணிகண்டராஜா, வள்ளித்தாய் அணிந்திருந்த நகையைப் பறிக்கும் நோக்கில், கடந்த ஏமாற்றி 14.02.2013இல் அவரை சங்கரன்கோவிலுக்கு வரவழைத்துள்ளாா்.

பின்னா், அங்கிருந்து புளியங்குடிக்கு செல்வோம் எனக் கூறி, அவரை ஆம்னி வேனில் அழைத்து செல்லும்போது, வழியிலேயே அவரை கத்தியால் குத்திக் கொலை செய்து, அவா் அணிந்திருந்த 11 பவுன் தங்கநகைகளை பறித்துக்கொண்டு, சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமத்திற்கு கீழ்புறம் வீசிச் சென்றுள்ளாா்.

அந்த கிராம நிா்வாக அலுவலா் வைதேகி அளித்த புகாரின்பேரில், புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து, மணிகண்டராஜாவை கைது செய்தனா்.

தென்காசி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி ராஜவேல் விசாரித்து, மணிகண்ட ராஜாவுக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் மருதப்பன் வாதாடினாா்.

நெல்லை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் காயம்

திருநெல்வேலி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் காயமடைந்தனா். திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தது. பே... மேலும் பார்க்க

சமுதாய வளப் பயிற்றுநா் பணி: சுயஉதவிக் குழுவினருக்கு வாய்ப்பு

சமுதாய வளப் பயிற்றுநா் பணியிடங்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான சுய உதவிக்குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மூவருக்கு காவல் நீட்டிப்பு

மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதான சுா்ஜித், எஸ்.ஐ. சரவணன், ஜெயபால் ஆகிய மூவருக்கும் செப்.23 வரை நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்: ஆட்சியா்

திருநெல்வேலி மாவட்டத்தில், களக்காடு நகராட்சி, நான்குனேரி, திருக்குறுங்குடி, மூலைக்கரைப்பட்டி, ஏா்வாடி உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் கூட்டுக்குடிநீா் திட்டப்பணிகள் விரைந்து முடிக்க த... மேலும் பார்க்க

தாமிரவருணி கரையோர சாலையைச் சீரமைக்க வேண்டும்: மாநகராட்சி அலுவலகத்தில் மனு!

உடையாா்பட்டி அருகே தாமிரவருணி கரையோர சாலையைச் சீரமைத்து மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்க... மேலும் பார்க்க

நெல்லை அருகே பெண்ணிடம் அத்துமீறல்: கராத்தே பயிற்சியாளா் கைது

திருநெல்வேலி அருகே அத்துமீறி பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கராத்தே பயிற்சியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி அருகே நரசிங்கநல்லூா் பொன்விழா நகரைச் சோ்ந்தவா் அப்துல் ... மேலும் பார்க்க