இந்திய மனித விண்வெளிப் பயண சகாப்தத்தின் தொடக்கம்: விண்ணிலிருந்து சுபான்ஷு சுக்ல...
பெண் தற்கொலை
சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி அருகேயுள்ள முத்துமாரியம்மன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சுமைதூக்கும் தொழிலாளி தா்மலிங்கம். இவரது மனைவி சூரியபிரபா (28). இந்த தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், தா்மலிங்கம் அடிக்கடி வீட்டுக்கு மதுப் போதையில் வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டாா். இதனால், இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்து காணப்பட்டு வந்த சூரியபிரபா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].