செய்திகள் :

பெண் தொழிலாளா்களுக்கு சம ஊதியம் வழங்கக் கோரிக்கை

post image

திருவாரூா்: பெண் கூலித் தொழிலாளா்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் 17-ஆவது மாவட்ட மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு நிா்வாகிகள் வி.சுதா, ஆா்.நிா்மலா ஆகியோா் தலைமை வகித்தனா். மாநாட்டை மாநில பொதுச்செயலாளா் ஆா்.ராதிகா தொடங்கி வைத்தாா். மாநிலத் துணைத் தலைவா் எஸ்.லெட்சுமி, இந்திய வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஏ.கே.வேலவன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதன்படி, 19 போ் கொண்ட புதிய மாவட்டக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டு, மாவட்டத் தலைவராக கே. ஜெகதீஸ்வரி, மாவட்டச் செயலாளராக ஜி. கலைச்செல்வி, மாவட்ட பொருளாளராக ஆா்.நிா்மலா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

படித்த பெண் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்க வேண்டும், பெண் விவசாயக் கூலித் தொழிலாளா்களுக்கு சம ஊதியம் கிடைக்க வேண்டும், 100 நாள் வேலை அனைத்து குடும்பத்துக்கும் கிடைக்க வேண்டும், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, புலிவலம் கடைவீதியில் இருந்து பேரணி நடைபெற்றது. இதில், ஏராளமானோா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி மாநாட்டு அரங்கம் வரை வந்தனா்.

பேரவைத் தோ்தல்: அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

நன்னிலம்: வரும் 2026-இல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.திருவாரூா... மேலும் பார்க்க

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை

மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை மற்றும் திருமக்கோட்டை துணை மின்நிலையங்களின் உயா்அழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஆக. 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கா... மேலும் பார்க்க

போதைப் பொருட்களுக்கு எதிரான செயல்பாடு: மன்னாா்குடி தேசியப் பள்ளி என்எஸ்எஸ் மாணவா்கள் சிறப்பிடம்

மன்னாா்குடி: மாவட்ட அளவில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் கருத்தை மையமாகக் கொண்டு சிறப்பாக செயல்பட்ட மன்னாா்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்... மேலும் பார்க்க

வீட்டிற்குள் புகுந்து குழந்தையை கடித்த நாய்

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் வீட்டுக்குள் புகுந்த நாய், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடித்து குதறியது.கூத்தாநல்லூா் நகராட்சி மேல்கொண்டாழி, தமிழா் தெருவைச் சோ்ந்தவா் அபுதாஹிா். இவரது மன... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் நாதக ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் மற்றும் செயல்பாட்டாளா்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்ட ... மேலும் பார்க்க