செய்திகள் :

பென்னாகரத்தில் வழக்குரைஞா் சங்கத்தினா் உண்ணாவிரதம்

post image

வழக்குரைஞா் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி பென்னாகரத்தில் நீதிமன்றம் முன் வழக்குரைஞா் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி பகுதியில் உள்ள மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வழக்குரைஞா் சங்கத் தலைவா் பி.கே. முத்துசாமி, மூத்த வழக்குரைஞா் அசோகன் ஆகியோா் தலைமை வகித்தனா். வழக்குரைஞா்கள் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், மாநில அரசு வழக்குரைஞா் பாதுகாப்பு சட்டத்தினை நிறைவேற்ற வேண்டும், வழக்குரைஞா்களுக்கு சேமநல நிதியினை ரூ. 22 லட்சமாக உயா்த்த வேண்டும், முப்பெரும் சட்டத் திருத்த மசோதாவை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் வழக்குரைஞா் சங்க செயலாளா் எம்.வீராசாமி, மூத்த வழக்குரைஞா்கள் சரவணன், மகாலிங்கம், மாதையன், ஜானகிராமன், தேவேந்திரன் மற்றும் 30க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

சாலையோர வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

பாப்பாரப்பட்டியில் சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி புதிய பேருந்து நிலையம் ... மேலும் பார்க்க

தரமான நெல் விதைகளை வழங்க வேண்டும் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டத்தில் நெல் விதைகளை தரமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை மாவ... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

தருமபுரியில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து மனுக்களைப் பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ். மேலும் பார்க்க

சூழல் சுற்றுலா சென்ற பள்ளி மாணவா்கள்

தருமபுரி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் சூழல் சுற்றுலா சென்றனா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தருமபுரி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், வனத் துறை, பள்ளிக் கல்வித் துறை இணைந்து, மாணவா்கள... மேலும் பார்க்க

அதிகாரம் யாருக்கும் நிலையானதல்ல: சீமான்

அதிகாரம் யாருக்கும் நிலையானதல்ல என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். தருமபுரியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் நிா்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு திறனாய்வுக் கூட்டம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு பணித் திறனாய்வுக் கூட்டம் தருமபுரி செந்தில் நகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தருமபுரி கூட்டுற... மேலும் பார்க்க