செய்திகள் :

பென்னாகரம் காவல் நிலையம் முன்பு பாமகவினர் சாலை மறியல்

post image

தர்மபுரி மாவட்ட பாமக நிர்வாகி கைதைக் கண்டித்து அந்த கட்சியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பென்னாகரம் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஒகேனக்கல்லில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு தொடக்க விழாவின்போது மேடையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியபோது, பாமக தலைவர் அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து தரக்குறைவாக பேசியது அந்த கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதற்கு மாறாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் குறித்து சமூக வலைதளத்தில் பாமக தருமபுரி மாவட்ட துணை தலைவர் மந்திரி படையாட்சி அவதூறு கருத்து பரப்பியதாக பென்னாகரம் காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுகவினர் புகார் மனு அளித்திருந்தனர்.

அதன்பேரில் பென்னாகரம் போலீஸார் மாவட்ட துணைத் தலைவர் மந்திரி படையாட்சியை கைது செய்தனர். இதனை அறிந்த அந்த கட்சியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் பென்னாகரம் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். பின்னர் பென்னாகரம் தொகுதி பொறுப்பாளர் சுதா கிருஷ்ணன் தலைமையில் பென்னாகரம் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம்: டிடிவி தினகரன்

மறியலில் ஈடுபட்ட பாமகவினரை போலீஸார் கைது செய்ய குண்டு கட்டாக தூக்கி, இழுத்துச் சென்றனர். இதனால் பாமகவினர் போலீஸார் இடையே தகராறு ஏற்பட பதட்டமான சூழல் நிலவியது. இதனிடையே பாமகவினர் போலீஸாரிடம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து சாலை மறியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

More than a hundred members of the party staged a road blockade in front of the Pennagaram police station to protest the arrest of the Dharmapuri district PMK executive.

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

கார் விபத்து தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்ததாக தொடரப்பட்ட தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை ஆதீனம் மனு தாக்கல் செய்துள்ளார்.கடந்த மே 2 ஆம் தேதி ... மேலும் பார்க்க

ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற ஆக. 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்... மேலும் பார்க்க

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் ஆக. 9 ஆம் தேதி திறந்துவைக்கவுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் இ... மேலும் பார்க்க

கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!

தமிழத்தில் கோவை, நீலகிரியில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,• தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள... மேலும் பார்க்க

உதகைக்கு விரைந்த பேரிடர் மீட்புக் குழுவினர்!

உதகையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தடைந்தனர். ஆய்வாளர் தீபக் தலைமையினலான 10 பேர் கொண்ட குழு உதகையை வந்தடைந்தனர்.வால்பாறையில் ஏற்கெனவே ... மேலும் பார்க்க

ராமதாஸ் வீட்டில் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார்!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வீட்டில் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கோட்டக்குப்பம் டி.எஸ்.பி -க்கு இன்று(செவ்வாய்க்கிழமை) புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ராமதாஸின் தனிச்செயலர் பி.சுவா... மேலும் பார்க்க