செய்திகள் :

பெரம்பலூரில் விஜய் பிரசாரம் ரத்து! நள்ளிரவில் சென்னை புறப்பட்டதால் தொண்டர்கள் ஏமாற்றம்!

post image

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பெரம்பலூர் பிரசாரம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியிலிருந்து தொடங்கியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து தொண்டர்களின் வெள்ளத்தில் மிதந்து சுமார் 5 மணிநேர பயணத்துக்கு பிறகு, மக்களைச் சந்தித்த விஜய், அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

திருச்சியில் இருந்து அதேபோன்று மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த விஜய், அரியலூருக்கு இரவு 8.45 மணியளவில் உரையாற்றினார்.  

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில், அடுத்ததாக பெரம்பலூர் மக்கள் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், இந்தப் பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் வருகையையொட்டி வழி நெடுகிலும் 2 கி.மீ வரை மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாலும், கடும் வாகன நெரிசல், வழி நெடுக மக்கள் கூட்டம் மற்றும் பல மணி நேரம் ஒரே இடத்தில் பேருந்து சிக்கியது.

நள்ளிரவு தாண்டி பேச முடியாத சட்ட சூழல் காரணத்தால், பொது மக்கள் நலன் கருதி, நள்ளிரவில் அசாம்பாவிதங்களை தவிர்க்க பெரம்பலூர் மக்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூரின் குன்னம் பகுதிக்கு வந்த விஜய், மக்களைப் பார்த்து கையை மட்டும் அசைத்துவிட்டு எதுவும் பேசாமல் சென்னை புறப்பட்டதால் தவெக தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில் கொண்டும் இந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு நாள் அவர் அங்கு பிரசாரத்தில் ஈடுபடுவார் என தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் தகவல் தெரிவிக்கின்றன.

Vijay's campaign in Perambalur cancelled! Volunteers disappointed as he leaves for Chennai!

இதையும் படிக்க... நானும் சேர்ந்துதான் திமுகவை தேர்ந்தெடுத்தேன்; ஆனால்..! -அரியலூரில் விஜய்

‘மேக்ஸி கேப்’ வாகனங்களை சிற்றுந்துகளாக இயக்க அரசு முடிவு!

‘மேக்ஸி கேப்’ வாகனங்களை சிற்றுந்துகளாக இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மலைப் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் பேருந்து சேவை கிடைக்கும் வகையில், தமிழக ... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - தனியரசு

- உ.தனியரசு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா், தலைவா், தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை -வர இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்வைத்து தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை முன்னணி நட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 7.23 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு: தமிழக அரசு தகவல்!

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் 7.23 லட்சம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் குறித்து தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியத் தலைவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

வாலாஜா பஜாா் மசூதி நிதி முறைகேடு புகாா் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தொடரப்பட்ட வழக்கில் தமிழக வக்ஃப் வாரியத் தலைவா் நவாஸ் கனி பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ராணிப்பேட்டை மாவட்... மேலும் பார்க்க

21-ஆவது ஆண்டில் தேமுதிக: பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம்!

பல்வேறு வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் எல்லாவற்றையும் கடந்து, தேமுதிக 21-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாக தேமுதிக பொதுச் செயலா் பிரமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். இது குறித்து அவா் தேமுதிக தொண்டா்களு... மேலும் பார்க்க

வன்னியா்களுக்கு 15 % இட ஒதுக்கீட்டை பெறுதே லட்சியம்: அன்புமணி!

வன்னியா்களுக்கான 15 சதவீத தனி இட ஒதுக்கீட்டை வென்றெடுப்பதே லட்சியம் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் பாமக நிா்வாகிகளுக்கு எழுதிய கடிதம்: கடந்த அதிமுக ஆட்சியில் பாமக சாா்ப... மேலும் பார்க்க