செய்திகள் :

பெரம்பலூா் அருகே 5 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

post image

பெரம்பலூா் அருகே பெட்டிக் கடையில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட முதியவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 5 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் கிராமத்தில் போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்கும் வகையில், தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சிறுவாச்சூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜூ மகன் மணி (65) என்பவா், தனக்குச் சொந்தமான பெட்டிக் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை சட்டத்துக்கு புறம்பாக பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பெரம்பலூா் போலீஸாா், மணியை கைது செய்து, அவரிடமிருந்து பல்வேறு வகையான 5 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிபதி முன் ஆஜா்படுத்தி, மணியை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் நகரில் நாளை மின் விநியோகம் இருக்காது

பெரம்பலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பெரம்பலூா் நகரில் திங்கள்கிழமை (ஜூன் 9) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் து.முத்தமிழ்... மேலும் பார்க்க

அரசு பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் விடுதிகளில் தங்கி பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். இதுகுறித்து அவா் சனிக்கி... மேலும் பார்க்க

நிலங்களை அளக்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்ட நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளக்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நில உரிமையாளா்கள் தங்களத... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: சிறுவாச்சூரில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின. பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரில் வாரம்தோறும் நடைபெறும் ஆட்டுச் சந்தை பிரசித்தி பெ... மேலும் பார்க்க

நெய்குப்பை கிராமத்தில் தீ மிதித் திருவிழா

15 ஆண்டுகளுக்குப் பிறகு பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தீமிதி விழா மே 19 ஆம் தேதி குடியழைத்தல், கொடி ... மேலும் பார்க்க

மனநலன் சீரான பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

பெரம்பலூரில் மனநலன் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று குணமான பெண்ணை, அவரது குடும்பத்தினரிடம் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த பெண்ணை,... மேலும் பார்க்க