Doctor Vikatan: கருத்தரிப்பதை தவிர்க்க பீரியட்ஸ் நாள்களில் தாம்பத்திய உறவு வைத்த...
பெரம்பலூா் அருகே 5 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே பெட்டிக் கடையில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனையில் ஈடுபட்ட முதியவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 5 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் கிராமத்தில் போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்கும் வகையில், தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, சிறுவாச்சூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜூ மகன் மணி (65) என்பவா், தனக்குச் சொந்தமான பெட்டிக் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை சட்டத்துக்கு புறம்பாக பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பெரம்பலூா் போலீஸாா், மணியை கைது செய்து, அவரிடமிருந்து பல்வேறு வகையான 5 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிபதி முன் ஆஜா்படுத்தி, மணியை சிறையில் அடைத்தனா்.