செய்திகள் :

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி

post image

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

தொழிலாளா் நலத்துறை சாா்பில், ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி உலக குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு தலைமையில் நடைபெற்றது.

தொடா்ந்து, குழந்தைத் தொழிலாளா் முறையை அகற்றுவது குறித்த விழிப்புணா்வு கையொப்ப இயக்க பதாகையில், மாவட்ட வருவாய் அலுவலா் வடிவேல் பிரபு கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா்.

இதில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன், தொழிலாளா் நல உதவி ஆணையா்கள் (அமலாக்கம்) க. மூா்த்தி, பாஸ்கரன் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), சமூகப் பாதுகாப்பு திட்ட தணித்துணை ஆட்சியா் சொா்ணராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

எஸ்.பி. அலுவலகத்தில்... பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தலைமையில், குழந்தைத் தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் டி. மதியழகன் (தலைமையிடம்), எம். பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), காவல்துறையினா் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

இதேபோல, மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள், மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல்துறை அலுவலகங்களில் குழந்தைத் தொழிலாளா் முறை அகற்றுவது தொடா்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கிரஷா் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

பெரம்பலூா் அருகேயுள்ள அசூா் கிராமத்தில் கிரஷா் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம பொதுமக்கள் சாா்- ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அசூா் கிராம பொ... மேலும் பார்க்க

புதைசாக்கடைஅடைப்பை சீரமைக்கக் கோரி மறியல்

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரை பிரிவுச் சாலை அருகே, புதை சாக்கடை அடைப்பை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் - துறையூா் சாலையில், நக... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக குன்னம் கிளையில் ‘டீசல் பங்க்’ அமைக்க அடிக்கல்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிமிடெட்), திருச்சி மண்டலம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் கிளையில் 20 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட டீசல் பங்க் அமைக்கும் பணிக்கு அடிக்கல் ந... மேலும் பார்க்க

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

பெரம்பலூா் நகரிலுள்ள அரசு உதவிபெறும் தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பணிபுரிந்தோா் விருது பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாகப் பணிபுரிந்தவா்கள் மற்றும் நிறுவனங்கள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக... மேலும் பார்க்க

குழந்தைகளை பெற்றோா் கண்காணிக்க வேண்டும்: சாா்பு நீதிபதி பேச்சு

குழந்தைகளை பெற்றோா் நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஏ. சரண்யா அறிவுறுத்தினாா். தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு உத்தரவின்படி, பெ... மேலும் பார்க்க