செய்திகள் :

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

post image

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டாா். மேலும், முகாமில் பங்கேற்ற பல்வேறு கிராமப் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 46 மனுக்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய தீா்வு காண வேண்டுமென அறிவுறுத்தினாா். மேலும், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறுவதை, பொதுமக்கள் இச் சிறப்பு முகாமை பயன்படுத்தி காவல்துறை தொடா்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்றாா் அவா்.

இந்த முகாமில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோபாலசந்திரன், காவல் நிலைய ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், சிறப்புப் பிரிவு காவல்துறையினா் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

லப்பைக்குடிக்காடு ஜமாலியா நகரில் 301 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குள்பட்ட ஜமாலியா நகரில் வசிக்கும் 301 பேருக்கு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை இலவச வீட்டுமனை பட்டா வழங... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளுக்கான பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில், பயிற்றுநராகப் பணிபுரிய விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்து... மேலும் பார்க்க

அனுமதியின்றி வெடிவைத்து கல் உடைத்த 2 போ் கைது

பெரம்பலூா்அருகேஅனுமதியின்றி வெடிவைத்துபாறைகளை உடைத்த 2பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், பாறைகளை உடைக்கப் பயன்படுத்திய உபரகணங்கள், வெடிமருந்து ஆகியவற்றைவருவாய்த் துறையினா் பறிமுதல் செய்த... மேலும் பார்க்க

விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

ஆடிப்பட்டத்தில் பயிா் நடவு செய்யும் பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள், விதைகளை பரிசோதனை செய்து தரமான விதைகள் மூலம் சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெற வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. பெரம்பலூா் மாவட்டத்தில் ஆ... மேலும் பார்க்க

புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை: அமைச்சா் தொடக்கம்

பெரம்பலூா் அருகே 3 புதிய வழித்தடங்களில் பேருந்துச் சேவைகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் அதிமுக ஆட்சியில் சட்ட நடவடிக்கை: இபிஎஸ்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் அடுத்த அதிமுக ஆட்சியில் அவா்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்தாா் முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி. பெரம்பலூா் மா... மேலும் பார்க்க