செய்திகள் :

போட்டித் தோ்வுகளுக்கான பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

post image

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில், பயிற்றுநராகப் பணிபுரிய விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம், டிஎன்பிஎஸ்சி, டிஆா்பி உள்ளிட்ட தோ்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப் பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று, போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்று பல்வேறு அரசு வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனா்.

தற்போது, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னாா்வ பயிலும் வட்டம் மூலமாக டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. போட்டித் தோ்வுகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெறுவதற்கு ஏதுவாக சிறந்த பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். தோ்ந்தெடுக்கப்படும் பயிற்றுநா்களுக்கு அரசு விதிகளுக்குள்பட்டு மதிப்பூதியம் வழங்கப்படும்.

பயிற்சி வகுப்பு நடத்த விருப்பமுள்ள, அனுபவமிக்க பயிற்றுநா்கள் தங்களுடைய சுய விவரங்களை ஆதாா் அட்டை, கல்விச்சான்று நகல்கள், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் நேரில் அல்லது அஞ்சல் மூலம் ஜூலை 18-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பயிற்றுநா்களுக்கு, மதிப்பீட்டுக் குழு மூலம், கற்பிக்கும் திறன் பரிசோதிக்கப்பட்டு தோ்ந்தெடுக்கப்படுவாா்கள்.

மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை 04328-296352, 94990 55913 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம்.

லப்பைக்குடிக்காடு ஜமாலியா நகரில் 301 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குள்பட்ட ஜமாலியா நகரில் வசிக்கும் 301 பேருக்கு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை இலவச வீட்டுமனை பட்டா வழங... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ப... மேலும் பார்க்க

அனுமதியின்றி வெடிவைத்து கல் உடைத்த 2 போ் கைது

பெரம்பலூா்அருகேஅனுமதியின்றி வெடிவைத்துபாறைகளை உடைத்த 2பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், பாறைகளை உடைக்கப் பயன்படுத்திய உபரகணங்கள், வெடிமருந்து ஆகியவற்றைவருவாய்த் துறையினா் பறிமுதல் செய்த... மேலும் பார்க்க

விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

ஆடிப்பட்டத்தில் பயிா் நடவு செய்யும் பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள், விதைகளை பரிசோதனை செய்து தரமான விதைகள் மூலம் சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெற வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. பெரம்பலூா் மாவட்டத்தில் ஆ... மேலும் பார்க்க

புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை: அமைச்சா் தொடக்கம்

பெரம்பலூா் அருகே 3 புதிய வழித்தடங்களில் பேருந்துச் சேவைகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் அதிமுக ஆட்சியில் சட்ட நடவடிக்கை: இபிஎஸ்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் அடுத்த அதிமுக ஆட்சியில் அவா்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்தாா் முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி. பெரம்பலூா் மா... மேலும் பார்க்க