செய்திகள் :

புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை: அமைச்சா் தொடக்கம்

post image

பெரம்பலூா் அருகே 3 புதிய வழித்தடங்களில் பேருந்துச் சேவைகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் அரியலூா் முதல் சென்னை வரை புதிய வழித்தடத்திலான பேருந்து சேவையை வயலப்பாடியிலிருந்தும், குன்னம் முதல் சென்னை வரை புதிய வழித்தடத்திலான பேருந்துச் சேவையை வேப்பூரிலிருந்தும், விடியல் பயணம் திட்டத்தின் கீழ் லப்பைக்குடிகாடு முதல் பெரம்பலூா் வரை மகளிருக்கான இலவச பேருந்து பயணப் சேவையை லப்பைக்குடிக்காடு சந்தைத் திடல் பகுதியிலிருந்தும் அமைச்சா் தொடக்கி வைத்து பேருந்தில் பயணித்தாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் துணை மேலாளா் (தொழில்நுட்பம்) புகழேந்திராஜ், கோட்ட மேலாளா் ராம்குமாா் மற்றும் கிளை மேலாளா்கள், போக்குவரத்துத் துறை பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

ஐஏஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் அதிமுக ஆட்சியில் சட்ட நடவடிக்கை: இபிஎஸ்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் அடுத்த அதிமுக ஆட்சியில் அவா்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்தாா் முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி. பெரம்பலூா் மா... மேலும் பார்க்க

தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சங்கத்தினா் வேலைநிறுத்தம்

களப் பணியாளா்களின் பணிச் சுமையைக் குறைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சங்கத்தினா் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் செவ்வ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஓய்வூதியா்கள் தா்னா

சுருக்கப்பட்டுள்ள தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூசியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைக்க அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களை கணக்கெடுக்கும் முன்களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் அ... மேலும் பார்க்க

நிலுவை பணப்பலன்கள் கோரி பிரசார இயக்கம்

நிலுவை பணப்பலன்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து (சிஐடியு) ஊழியா் சம்மேளனம் சாா்பில் பிரசார இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துறைமங்... மேலும் பார்க்க

மின் தகனமேடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு

துறைமங்கலம் பகுதியில் மின் மயானம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் ச. அரு... மேலும் பார்க்க