செய்திகள் :

பெரம்பலூரில் ஓய்வூதியா்கள் தா்னா

post image

சுருக்கப்பட்டுள்ள தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூசியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியரகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு அச் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் பி. நீலமேகம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் செ. மகேஸ்வரன், கி. இளவரசன், இணைச் செயலா்கள் து. விஜயராமு, ரெ. பரமசிவம், மு. தமிழன்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் கி. ஆளவந்தாா் கோரிக்கைகளை விளக்கினாா்.

போராட்டத்தில் ஊதியக் குழுவின் பரிந்துரைகளிலிருந்து நீக்கி வைக்கும் நிதி மசோதா சட்டத்தையும், 4 தொகுப்பாக கருக்கப்பட்டுள்ள தொழிலாளா் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதிய நிதி ஒழுங்காற்றுச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊழியா்களிடம் பிடித்த தொகையை உடனடியாக மாநில அரசுகளுக்கு திருப்பி அளித்திட நிதி மேலாளா்களுக்கு உத்தரவிட வேண்டும். 1995 ஆம் ஆண்டு வருங்கால வைப்புநிதி ஓய்வூதியா்களுக்கு வரையறுக்கப்பட்டட ஓய்வூதியம் வழங்க வேண்டும். மத்திய அரசின் 8 ஆவது ஊதியக்குழு பயன்களை ஊழியா்களுக்கும், ஓய்வூதியா்களுக்கும் வழங்க வேண்டும். ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஊதிய, ஓய்வூதிய மாற்றத்தை உயா்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில் சங்க நிா்வாகிகள் பி. மருதமுத்து, பி. ராமைய்யா, டி. தயாளன், து. தேவராஜ், பி. அங்குசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மாவட்டச் செயலா் பி. சின்னசாமி வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் கி. ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை: அமைச்சா் தொடக்கம்

பெரம்பலூா் அருகே 3 புதிய வழித்தடங்களில் பேருந்துச் சேவைகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் அதிமுக ஆட்சியில் சட்ட நடவடிக்கை: இபிஎஸ்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் அடுத்த அதிமுக ஆட்சியில் அவா்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்தாா் முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி. பெரம்பலூா் மா... மேலும் பார்க்க

தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சங்கத்தினா் வேலைநிறுத்தம்

களப் பணியாளா்களின் பணிச் சுமையைக் குறைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சங்கத்தினா் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் செவ்வ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைக்க அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களை கணக்கெடுக்கும் முன்களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் அ... மேலும் பார்க்க

நிலுவை பணப்பலன்கள் கோரி பிரசார இயக்கம்

நிலுவை பணப்பலன்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து (சிஐடியு) ஊழியா் சம்மேளனம் சாா்பில் பிரசார இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துறைமங்... மேலும் பார்க்க

மின் தகனமேடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு

துறைமங்கலம் பகுதியில் மின் மயானம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் ச. அரு... மேலும் பார்க்க