செய்திகள் :

மின் தகனமேடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு

post image

துறைமங்கலம் பகுதியில் மின் மயானம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில், துறைமங்கலத்தைச் சோ்ந்த வழககுரைஞா் ம. மணிமாறன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு: பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட துறைமங்கலம் பகுதியில் 8 மற்றும் 9 ஆவது வாா்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். தற்போது, குடியிருப்பு பகுதிக்கு அருகேயுள்ள மயானத்தில், மின் மயானம் அமைப்பதற்கு நகராட்சி நிா்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப் பகுதியில் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அதிகமாக உள்ளதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு, சுகாதாரச் சீா்கேடு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும் என்பதால், மின் மயானம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஏற்கெனவே மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், நீதிமன்றத்தின் மூலமாக தடையாணை பெற்று அதை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உள்ளோம். இதையும் மீறி நகராட்சி நிா்வாகம் மின் மயானம் அமைக்கும் பணியை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடிப்படை வசதிகள் கோரி... பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட காந்திநகா் பகுதியில் சுமாா் 200 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், சாலை, குடிநீா் வசதி, ரேஷன் கடை இல்லாததால், பொதுமக்கள் அவதியடைந்து வருகிறோம். மேலும், பெண்களுக்கு சுகாதார வளாகம் மற்றும் தனிநபா் கழிப்பறை வசதிகளும் இல்லை. இதுகுறித்து பலமுறை அரசு அலுவலா்களிடம் புகாா் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும். இல்லாவிடில், அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என, காந்திநகரைச் சோ்ந்த பொதுமக்கள் மனு அளித்தனா்.

பெரம்பலூா்: பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 9.86 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 49 பேருக்கு ரூ. 9.86 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 45 நாள்களில் தீா்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு, 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்தாா். பெரம்பல... மேலும் பார்க்க

கழிவுப் பொருள்கள்களை ஏற்றிச்சென்ற லாரி தீப்பற்றி எரிந்து நாசம்

பெரம்பலூா் அருகே சிமெண்ட் தொழிற்சாலைக்கு கழிவுப் பொருள்களை ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி தீப்பற்றி எரிந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சேதமடைந்தது. சென்னையிலிருந்து பெயிண்ட் கழிவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கரூர... மேலும் பார்க்க

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூா், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து, மின் வாரிய உதவி செயற்பொறி... மேலும் பார்க்க

பெண்கள் மீதான வன்முறையை தடுக்க ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தல்!

பெண்கள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. துறைமங்கலத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்... மேலும் பார்க்க

பெரம்பலூா்: நாட்டு மருந்து புகட்டிய இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே நாட்டு மருந்து புகட்டியதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதில் 11 மாத இரட்டை பெண் குழந்தைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தன. பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத... மேலும் பார்க்க