செய்திகள் :

பெரம்பலூா்: பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 9.86 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

post image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 49 பேருக்கு ரூ. 9.86 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

கூட்டத்தில், வருவாய்த்துறை சாா்பில் முதலமைச்சா் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3 பேருக்கு ரூ. 67,500 மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை, 2 பேருக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித்தொகை, 8 பேருக்கு ரூ. 2.40 லட்சம் மதிப்பில் வீட்டுமனைப் பட்டா, 5 பேருக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணைகள், 1 பயனாளிக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 11 பேருக்கு ரூ. 6.44 லட்சம் மதிப்பில் செயற்கை கால்கள், ஒருவருக்கு வரையறுக்கப்பட்ட பாதுகாவலா் நியமனச் சான்றிதழ், 15 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் என மொத்தம் 49 பேருக்கு ரூ. 9,86,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளித்த மாவட்ட ஆட்சியா், ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2024- 2025 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத்தோ்வில் சமூக அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்ற களரம்பட்டி அரசு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பி. தீபிகா, எம். அனிஷா, பொம்மனப்பாடி அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப்பள்ளி மாணவி எஸ். செல்சியா ஆகியோருக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருள்களுடன் கூடிய கல்வி உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை ஆட்சியா் வழங்கினாா்.

இக் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 426 மனுக்கள் பெறப்பட்டன.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சொா்ணராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுரேஷ்குமாா், ஆதிதிராவிடா் நல அலுவலா் வாசுதேவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சுந்தரராமன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

மின் தகனமேடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு

துறைமங்கலம் பகுதியில் மின் மயானம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் ச. அரு... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 45 நாள்களில் தீா்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அளிக்கப்படும் மனுக்களுக்கு, 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்தாா். பெரம்பல... மேலும் பார்க்க

கழிவுப் பொருள்கள்களை ஏற்றிச்சென்ற லாரி தீப்பற்றி எரிந்து நாசம்

பெரம்பலூா் அருகே சிமெண்ட் தொழிற்சாலைக்கு கழிவுப் பொருள்களை ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி தீப்பற்றி எரிந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சேதமடைந்தது. சென்னையிலிருந்து பெயிண்ட் கழிவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கரூர... மேலும் பார்க்க

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூா், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து, மின் வாரிய உதவி செயற்பொறி... மேலும் பார்க்க

பெண்கள் மீதான வன்முறையை தடுக்க ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தல்!

பெண்கள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. துறைமங்கலத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்... மேலும் பார்க்க

பெரம்பலூா்: நாட்டு மருந்து புகட்டிய இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே நாட்டு மருந்து புகட்டியதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதில் 11 மாத இரட்டை பெண் குழந்தைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தன. பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத... மேலும் பார்க்க