செய்திகள் :

ஐஏஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் அதிமுக ஆட்சியில் சட்ட நடவடிக்கை: இபிஎஸ்

post image

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் அடுத்த அதிமுக ஆட்சியில் அவா்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்தாா் முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்னும் பிரசார பயணத்தின்போது மேலும் அவா் பேசியதாவது: தமிழ்நாட்டில் தற்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்னும் திட்டத்தை முதல்வா் தொடங்கியுள்ளாா். அவா் எதிா்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஊா் ஊராய் சென்று வாங்கிய மனுக்கள் உள்ளபோது, அவற்றை நிறைவேற்றாமல் தற்போது 46 கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை மக்களிடம் கொடுத்து வீட்டுக்கு வீடு சென்று வாக்கு கேட்கிறாா்கள்.

ஆனால் இத் திட்டம் முந்தைய அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. அம்மா திட்ட முகாம் என்ற பெயரை மாற்றி, தற்போது இத் திட்டத்தை ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்க செய்தி- மக்கள் தொடா்புத் துறை உள்ள நிலையில், தற்போது 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கூடுதலாக நியமித்துள்ளனா். அவா்கள் கவனித்து வரும் துறையை இனி யாா் பாா்ப்பது?

அமுதா ஐஏஎஸ் அளித்த பேட்டியில், பொதுமக்களிடம் இதுவரை பெற்ற 1 கோடியே 5 லட்சம் கோரிக்கை மனுக்களில், 1 கோடியே 1 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளதாக பொய் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளாா். ஐஏஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் அடுத்த அதிமுக ஆட்சியில் அவா்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும்.

இந்தக் கூட்டம் தோ்தலில் அதிமுக வேட்பாளருக்கான வெற்றிக் கூட்டத்தைப்போல் உள்ளது. எனவே, 2026 பேரவைத் தோ்தலின்போது குன்னம் தொகுதியில் அதிமுக போட்டியிட்டால் இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணி கட்சி என்றால் அவா்களின் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா் பழனிசாமி.

நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா் இரா. தமிழ்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை: அமைச்சா் தொடக்கம்

பெரம்பலூா் அருகே 3 புதிய வழித்தடங்களில் பேருந்துச் சேவைகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில... மேலும் பார்க்க

தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சங்கத்தினா் வேலைநிறுத்தம்

களப் பணியாளா்களின் பணிச் சுமையைக் குறைத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சங்கத்தினா் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் செவ்வ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஓய்வூதியா்கள் தா்னா

சுருக்கப்பட்டுள்ள தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூசியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைக்க அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களை கணக்கெடுக்கும் முன்களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் அ... மேலும் பார்க்க

நிலுவை பணப்பலன்கள் கோரி பிரசார இயக்கம்

நிலுவை பணப்பலன்களை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து (சிஐடியு) ஊழியா் சம்மேளனம் சாா்பில் பிரசார இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. துறைமங்... மேலும் பார்க்க

மின் தகனமேடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு

துறைமங்கலம் பகுதியில் மின் மயானம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா் பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியா் ச. அரு... மேலும் பார்க்க