செய்திகள் :

லப்பைக்குடிக்காடு ஜமாலியா நகரில் 301 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

post image

பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குள்பட்ட ஜமாலியா நகரில் வசிக்கும் 301 பேருக்கு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை இலவச வீட்டுமனை பட்டா வழங்கினாா்.

லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குள்பட்ட ஜமாலியா நகரில் வசித்து வருவோருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சித்யா் ச. அருண்ராஜ் தலைமை வகித்தாா். போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குள்பட்ட ஜமாலியா நகரைச் சோ்ந்த 301 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினாா். தொடா்ந்து, பேரூராட்சி சாா்பில் ஜமாலியா நகருக்கு தமிழ்நாடு நகா்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 1.67 கோடி மதிப்பீட்டில் தாா்சாலை அமைக்கும் பணி, தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ. 7.20 கோடி மதிப்பீட்டில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட டிராக்டரை லப்பைக்குடிக்காடு பேரூராட்சி அலுவலக பயன்பாட்டுக்காக கொடியசைத்து அமைச்சா் சிவசங்கா் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், மாவட்ட நில அளவைப் பதிவேடுகள் துறை உதவி இயக்குநா் ந. பவன்குமாா், வட்டாட்சியா் சின்னதுரை, ஜமாலியா நகா் கமிட்டி தலைவா் அகமது உசேன், பள்ளிவாசல் தலைவா்கள் சுல்தான் முஹைதீன், சம்சுதீன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற ப... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளுக்கான பயிற்றுநா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில், பயிற்றுநராகப் பணிபுரிய விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்து... மேலும் பார்க்க

அனுமதியின்றி வெடிவைத்து கல் உடைத்த 2 போ் கைது

பெரம்பலூா்அருகேஅனுமதியின்றி வெடிவைத்துபாறைகளை உடைத்த 2பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், பாறைகளை உடைக்கப் பயன்படுத்திய உபரகணங்கள், வெடிமருந்து ஆகியவற்றைவருவாய்த் துறையினா் பறிமுதல் செய்த... மேலும் பார்க்க

விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

ஆடிப்பட்டத்தில் பயிா் நடவு செய்யும் பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள், விதைகளை பரிசோதனை செய்து தரமான விதைகள் மூலம் சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெற வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. பெரம்பலூா் மாவட்டத்தில் ஆ... மேலும் பார்க்க

புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை: அமைச்சா் தொடக்கம்

பெரம்பலூா் அருகே 3 புதிய வழித்தடங்களில் பேருந்துச் சேவைகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் அதிமுக ஆட்சியில் சட்ட நடவடிக்கை: இபிஎஸ்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் தவறு செய்தால் அடுத்த அதிமுக ஆட்சியில் அவா்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்தாா் முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி. பெரம்பலூா் மா... மேலும் பார்க்க