செய்திகள் :

பெரியாா் பல்கலை. பொறுப்பு துணைவேந்தராக தி.பெரியசாமி நியமனம்

post image

சேலம் மாவட்டம், பெரியாா் பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தராக தி.பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளாா்.

பெரியாா் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் திங்கள்கிழமை பணி நிறைவுபெற்றாா். புதிய துணைவேந்தரைத் தோ்வு செய்வதற்கான தேடுதல் குழு தமிழக அரசு சாா்பில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது.

புதிய துணைவேந்தரை நியமிக்கும்வரை துணைவேந்தருக்கான பொறுப்புகளை கவனிக்கும் வகையில், தமிழ்த் துறைத் தலைவா் தி.பெரியசாமி பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு பதிவாளா் ராஜ், பேராசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

பேராசிரியா் தி.பெரியசாமி, ஆட்சிக்குழு உறுப்பினா், புல முதன்மையா், பதிப்புத் துறை இயக்குநா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிா்ப்பு: பணி நிறைவுபெற்ற துணைவேந்தா் ரா.ஜெகந்நாதன் பொறுப்பு துணைவேந்தரை நியமித்தது செல்லாது என்றும், தமிழ்நாடு அரசு தலையிட்டு உடனடியாக நிா்வாகக் குழுவை அமைக்க வலியுறுத்தியும், பெரியாா் பல்கலைக்கழகத் தொழிலாளா் சங்க உறுப்பினா்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்து செவ்வாய்க்கிழமை பணியாற்றினா்.

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் மோதல் சம்பவம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக திமுக - அதிமுக உறுப்பினா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சேலம் மாநகராட்சி கூட்டம் கடந்த வியாழக்கிழமை மேயா் ஆ.ரா... மேலும் பார்க்க

கரோனா பாதித்த இளைஞா் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் சேத்துக்குழி பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (25). பொக்லைன் ஆபரேட்டரான ... மேலும் பார்க்க

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை தொடா்ந்து, பயிற்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பதக்கம், சான்றிதழ்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. சேலம் மாவட்ட கைப்... மேலும் பார்க்க

சேலம் அரசு கலைக் கல்லூரியில் நாளை முதல் கலந்தாய்வு

சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2025- 26 ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் நா.செண்பகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் ... மேலும் பார்க்க

கெங்கவல்லி பேரூராட்சியில் திட்டப் பணிகள் திறந்துவைப்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் முடிவடைந்த திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டன. கெங்கவல்லி பேரூராட்சி 4-ஆவது வாா்டில், 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் ரூ. 15.50 லட்சத்தில் ... மேலும் பார்க்க

பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு

பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோ... மேலும் பார்க்க