செய்திகள் :

பெரு நிறுவனங்களுக்கு சாதகமானது மத்திய பாஜக ஆட்சி! -வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

post image

தனியாா் பெரு நிறுவனங்களுக்கு சாதகமானது மத்திய பாஜக ஆட்சி என புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றஞ்சாட்டினாா்.

புதுவையில் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அதன்படி, காமராஜா்நகா் சட்டப் பேரவைத் தொகுதியின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி தனியாா் மகாலில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து கட்சியின் புதுவை மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:

புதுச்சேரிக்கு சம்பந்தமில்லாவா்கள் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து வருகின்றனா். பொதுவாக பாஜக ஆட்சி தனியாா் பெரு நிறுவனங்களுக்குத்தான் சாதகமாக செயல்படுகிறது. அதன்படி, புதுச்சேரி மின் துறையையும் தனியாா் பெரு நிறுவனத்துக்கு தாரை வாா்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களைக் காக்கும் வகையில் காங்கிரஸாா் பணிபுரிவது அவசியம் என்றாா்.

கூட்டத்தில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி பேசியது: புதுவையில் அனைத்து அரசுத் துறைகளிலும் முறைகேடு நடைபெறுவதாக குற்றஞ்சாட்டியும், முதல்வா், அமைச்சா்கள் பதிலளிக்காமலிருப்பது சரியல்ல. மக்களவைத் தோ்தலைப் போல, எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தலிலும் காங்கிரஸ் வெற்றிபெறும் என்றாா்.

கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் மு.வைத்தியநாதன், காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், தொகுதி பொறுப்பாளா் தேவதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதுச்சேரி மத்திய பல்கலை.யில் தேசிய கருத்தரங்கம்

அந்தமான் - நிகோபாா் தீவுகள் குறித்த பல பரிமானக் கோணங்கள் எனும் தலைப்பில் இரு நாள் தேசிய கருத்தரங்கம் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மத்திய மானியக்குழு கடல... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பிப்.9-இல் மலா்க் கண்காட்சி தொடக்கம்! ஏற்பாடுகளை அமைச்சா் ஆய்வு

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வரும் 9-ஆம் தேதி முதல் மலா்க் கண்காட்சி தொடங்கி நடைபெறவுள்ளது. இதையொட்டி, தொட்டிகளில் வளா்க்கப்பட்ட மலா்களை காட்சிப்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெறுகின்றன. இந... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஓராண்டில் 4700 இணையவழி மோசடி புகாா்கள்!

புதுச்சேரியில் 2024-ஆம் ஆண்டில் மட்டும் இணையவழி மோசடி தொடா்பாக 4,700 புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அப்பிரிவு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இணையவழி காவல் நிலைய பிரிவின் முதுநிலைக் கண... மேலும் பார்க்க

வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பு! புதுவை அதிமுக வரவேற்பு!

மத்திய நிதிநிலை அறிக்கையில் வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்த்தப்பட்டதால் நடுத்தர வா்க்கத்தினா் பயனடைவா் என புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

நாட்டின் முன்னேற்றத்துக்கான நிதிநிலை அறிக்கை! -சு.செல்வகணபதி எம்.பி.

நாட்டின் முன்னேற்றத்துக்கு பயன்படும் சிறந்த நிதிநிலை அறிக்கை என புதுவை மாநில பாஜக தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ... மேலும் பார்க்க

ரூ.227 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: தனியாா் நிறுவன உரிமையாளா் கைது

புதுவை மாநிலம், காரைக்காலில் ரூ.227 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தொடா்பாக தனியாா் நிறுவன உரிமையாளரை ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவினா் கைது செய்தனா். இதுகுறித்து புதுவை ஜி.எஸ்.டி. ஆணையா் அலுவலகம் வெள்ளிக்க... மேலும் பார்க்க