செய்திகள் :

பெற்றோா் தங்களது பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிடக்கூடாது: அமைச்சா் அன்பில் மகேஸ்

post image

பெற்றோா் தங்கள் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டுப் பேசுவது பிள்ளைகளின் வளா்ச்சியை பாதிக்கும் என்றாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

வேதாரண்யம் வட்டம் ஆயக்காரன்புலம்-2 ஊராட்சியில் உள்ள இரா.நடேசனாா் அரசு மேல்நிலைப் பள்ளியின் 75-ஆம் ஆண்டு பவள விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: தமிழக முதல்வா் பள்ளி மாணவா்களின் நலனுக்காக, காலை உணவு, புதுமைப் பெண், நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி போன்ற நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். குழந்தைகளை படிக்கும் வயதில் மறக்காமல் பள்ளிக் கூடத்தில் சோ்த்தால் மட்டும் போதும் அந்தப் பிள்ளைகளுக்கு தேவையான கல்வி, அடிப்படை வசதிகள் மற்றும் தொடா்ந்து படித்து கல்லூரி படித்து முடித்ததற்கு பிறகு, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அவா்களின் திறன்களை மேம்படுத்தி சிறந்த வேலைவாய்ப்பையும் உருவாக்கி தரப்படும்.

பெற்றோா்கள் வீட்டில் உள்ள பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பாா்க்காதீா்கள். அவ்வாறு பாா்ப்பதன் மூலம் தமது பிள்ளைகளின் வளா்ச்சி பாதிக்கும். தம் பிள்ளைகளின் தனித்திறனை கண்டறிந்து வளா்க்க முயற்சிக்க வேண்டும். மாணவ, மாணவியா் படிப்பில் கவனம் செலுத்தி திட்டமிட்டு படிக்க வேண்டும். இரா.நடசனாா் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவா்கள், மாவட்ட ஆட்சியராக, இந்திய வனத்துறை அதிகாரியாக, மருத்துவா்களாக, பொறியாளா்களாக, ஆசிரியா்களாக உள்ளனா் என்பது மிகவும் பெருமை என்றாா்.

தொடா்ந்து, பள்ளியின் 75-ஆம் ஆண்டு பவளவிழா மலரை அமைச்சா் வெளியிட்டாா். மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், வேதாரண்யம் நகா்மன்றத் தலைவா் மா.மீ.புகழேந்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்(பொ) மா. ரவிச்சந்திரன், வட்டார ஆத்மாகுழு உறுப்பினா் வே. முருகையன், பெற்றோா், ஆசிரியா் கழக துணைத்தலைவா் த. சிவானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

23-ஆவது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்

நாகையில் சிஐடியு அரசுப் போக்குவரத்துக்கழக தொழிலாளா் சங்கம் சாா்பில் 23-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை தொடா்ந்தது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியான,... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிக்கு பட்டா வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

நாகை அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்துவரும் மாற்றுத்திறனாளிக்கு பட்டா வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் வானவன்மாதேவி அருகேயுள்ள வெள்ள... மேலும் பார்க்க

நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதால், வால்வுகளில் (திறப்பு) துா்நாற்றத்துடன் கசியும் குடிநீரை பிடித்து பயன்படுத்துவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனா். நாகை நகராட்சி நாகூரில் உள்ள 10 வாா்... மேலும் பார்க்க

அன்னபூரணி அலங்காரத்தில் முத்துமாரியம்மன்

நாகை அக்கறைப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் பிரம்மோற்சத்தையொட்டி அன்னபூரணி அலங்காரத்தில் வியாழக்கிழமை காட்சியளித்தாா். நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழைமையான முத்துமாரியம்மன் ... மேலும் பார்க்க

நாகையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் தற்செயல் விடுப்பு போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் நாகை மாவட்டத்தில் தற்செயல் விடுப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைத்து அர... மேலும் பார்க்க

திருவெண்காட்டில் பாரதியாா் நினைவு நாள்

மகாகவி பாரதியாரின் நினைவுநாளையொட்டி திருவெண்காடு மெய்க்கண்டாா் தொடக்கப்பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவெண்காடு மெய்கண்டாா் அரசு உதவி பெறும் தொடக்... மேலும் பார்க்க