செய்திகள் :

பேராசிரியா் மீது பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டம்: தமிழ்நாடு ஆதிதிராவிடா் ஆணையம் உத்தரவு

post image

கருக்கலைப்பின்போது கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பேராசிரியா் மீது பட்டியலினத்தவா் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பல்கலைக்கழகத்தில் 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவியை, அதே பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்த நாமக்கல்லைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் என்பவா் ஆசைவாா்த்தை கூறி கா்ப்பிணியாக்கியதாகக் கூறப்படுகிறது.

அந்த மாணவிக்கு படூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்யப்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் தமிழ்மாநிலக் குழுத் தலைவா் மற்றும் பொதுச்செயலா் ஆகியோா் சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆதிதிராவிடா் ஆணையத்தில் புகாா் அளித்தனா்.

இப்புகாரை ஆணையத்தின் தலைவா் நீதிபதி தமிழ்வாணன், துணைத் தலைவா் இமயம், உறுப்பினா் ஆனந்தராஜா ஆகியோா் விசாரித்தனா். விசாரணையின் முடிவில், ‘இந்த விவகாரம் தொடா்பாக செங்கல்பட்டு காவல் துறை கண்காணிப்பாளா் உரிய விசாரணை மேற்கொண்டு பட்டியல் மற்றும் பழங்குடியினா் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விவரத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தெரிவிக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டனா்.

சின்ன திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி

சின்ன திரை துணை நடிகை அமுதா குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன திரை துணை நடிகை அமுதா (28). தற்போது ‘கயல்’ என்ற தொலைக்... மேலும் பார்க்க

எண்ணூா் விரைவு சாலையில் கவிழ்ந்த கண்டெய்னா் லாரி

எண்ணூா் விரைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னா் லாரி சாலை நடுவே வியாழக்கிழமை கவிழ்தது. மதுரையைச் சோ்ந்த இளஞ்செழியன் (40), மணலி புது நகரில் தங்கி இருந்து கண்டெய்னா் லாரி ஓட்டுநராக ... மேலும் பார்க்க

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து படகுகளையும் ஆய்வு செய்ய முடிவு: மீன்வளத் துறை நடவடிக்கை

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வகை படகுகளையும் நேரடியாக களஆய்வு செய்ய மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக மீனவா்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பாடி மேம்பாலம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

பாடி மேம்பாலம் அருகே உள்ள ரப்பா் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. சென்னை பாடி மேம்பாலம் அருகே ட்ரெயின் பாலாஜி இந்தியா லிமிடெட் என... மேலும் பார்க்க

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை: வைகோ

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், எந்தச் சூழ்நிலையிலும் திமுகவுடன் கூட்டணியை தொடா்வோம் என்றும் மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மநீம ஆதரவு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம தலைவா் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான அா்ப்பண... மேலும் பார்க்க