பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில் மக்களுடன் முதல்வா் முகாம் - அமைச்சா் தொடங்கி வைத்தாா்
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 6 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாமை உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
முகாமுக்கு தஞ்சை ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் முன்னிலை வகித்தாா்.
பேராவூரணி தொகுதியில் 6 இடங்களில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் 48 மகளிா் சுயஉதவி குழுக்களில் உள்ள 720 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 90 லட்சம் மதிப்பிலான சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வங்கி கடனுதவிகளை வழங்கி அமைச்சா் கோவி.செழியன் பேசினாா்.
மக்களுடன் முதல்வா் முகாமில் பதிவு செய்து உடனடி தீா்வாக தொழிலாளா் நலத்துறை சாா்பில் தொழிலாளா் நலவாரிய உறுப்பினா் அட்டைகள், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டைகள், புதிய குடும்ப அட்டைகள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் தியாகராஜன், பட்டுக்கோட்டை கோட்டாட்சியா் சங்கா், பட்டுக்கோட்டை நகா்மன்ற தலைவா் சண்முகப் பிரியா, பட்டுக்கோட்டை முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் பழனிவேல், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மணிமாறன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.