செய்திகள் :

பேரிடர் பாதித்த கேரளம் உள்பட 6 மாநிலங்களுக்கு ரூ.1,066 கோடி நிதி! - மத்திய அரசு ஒப்புதல்

post image

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயம், மிசோரம், கேரளம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,066.80 கோடி நிவாரண நிதியை விடுவிக்க மத்திய அரசு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களில், அசாமுக்கு ரூ.375.60 கோடியும், மணிப்பூருக்கு ரூ.29.20 கோடியும், மேகாலயத்துக்கு ரூ.30.40 கோடியும், மிசோரத்துக்கு ரூ. 22.80 கோடியும், கடுமையான நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு ரூ.153.20 கோடியும், உத்தரகண்டுக்கு ரூ.455.60 கோடியும் மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து வழங்க மத்திய முடிவு செய்துள்ளது.

மாநிலங்களின் நலனுக்கான மத்திய அரசின் முயற்சி குறித்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ பிரதமர் மோடி அரசு அனைத்துவிதமான சூழ்நிலைகளிலும் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஆதரவாக நிற்கிறது.

மத்திய அரசு வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயம், மிசோரம், கேரளம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு மாநில மற்றும் தேசிய பேரிடர் நிதியின் கீழ் ஒரு பகுதியாக ரூ.1066.80 கோடியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

தேசியப் பேரிடர் நிதியிலிருந்து 19 மாநிலங்களுக்கு இதுவரை ரூ.8000 கோடிக்கும் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளத் தரவுகளின்படி, மத்திய அரசு ஏற்கனவே 14 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூ. 6,166.00 கோடியையும், 12 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூ.1,988.91 கோடியையும் விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Union government approves release of Rs. 1,066.80 crore from Disaster Relief Fund!

இதையும் படிக்க:தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க