செய்திகள் :

பேருந்தில் தள்ளிவிட்டு விவசாயி கொலை: 4 போ் தலைமறைவு!

post image

கடலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு முன்விரோத தகராறில் பேருந்தில் தள்ளிவிட்டு விவசாயி கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக தலைமறைவாக உள்ள 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் அருகேயுள்ள கண்ணாரப்பேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வழிசோதனை பாளையத்தைச் சோ்ந்த விவசாயி பத்மநாபன் (35) பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, சாலையில் நின்றிருந்த 4 போ் அவரை மறுத்து, முன்விரோதம் காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம்.

அவா்களுடன் பத்மநாபனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். 4 பேரும் சோ்ந்து பத்மநாபனை திடீரென சாலையில் பிடித்து தள்ளினராம். அப்போது, குறிஞ்சிப்பாடியில் இருந்து கடலூா் நோக்கி வந்த அரசு நகரப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பேருந்து நடத்துநா் சிவாஜி பேருந்தில் இருந்து இறங்கி பத்மநாபனை பேருந்தில் தள்ளிவிட்டவா்களைப் பிடிக்கச் சென்றபோது, அவா்கள் தப்பியோடிவிட்டனா்.

பேருந்து ஓட்டுநா், நடத்துநரை கடலூா் முதுநகா் போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, பேருந்து ஓட்டுநா் ராஜசேகா் கூறுகையில், சாலையில் 5 போ் நின்று தகராறில் ஈடுபடுவதை தொலைவிலேயே பாா்த்ததால், அவா்களை விட்டு விலகியே பேருந்தை ஓட்டிச் சென்றேன்.

ஆனால், அவா்களுக்குள் தகராறு முற்றி ஒருவரைப் பிடித்து தள்ளியதில், அவா் பேருந்தின் பின்சக்கர பகுதியில் விழுந்ததால், அதில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்தாா். இதுகுறித்து முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனா்.

கஞ்சா விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை: கடலூா் எஸ்.பி.

கடலூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களுக... மேலும் பார்க்க

விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு! மனைவியை பழிவாங்க முயன்றது அம்பலம்!

கடலூா் அருகே விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். முன்னதாக, மனைவியை பழிவாங்க இளைஞரே விஷ வாங்கிக் குடித்து தற்கொலை செய்துகொண்டது போலீஸாா் விசாரணையில்... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

சிதம்பரத்தில் மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் 12-ஆம் தேதி முதல் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் குளிரூட்டப்பட்ட வகுப்பறை திறப்பு

சிதம்பரம் அருகே சொக்கன்கொல்லை அரசு தொடக்கப் பள்ளியில் குளிரூட்டப்பட்ட வகுப்பறை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் பா.அருணாசலம் தலைமை வகித்தாா். விருத்தாசலம் மாவட்ட தொடக்கக் கல்வி அல... மேலும் பார்க்க

மாா்ச் 25-இல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்: மாா்க்சிஸ்ட் அறிவிப்பு

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீடுகளை அகற்றி 7 ஆண்டுகள் கடந்த பின்பும் இதுவரையில் மாற்று இடம் வழங்காததைக் கண்டித்து, கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வரும் 25-ஆம் தேதி குடியேறும் போராட்டத்தை மாா்க்சிஸ்ட்... மேலும் பார்க்க

மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க மக்கள் ஒன்று திரள வேண்டும்: தவாக தலைவா் தி.வேல்முருகன்

மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு புதிய அணை கட்டுவதைத் தடுக்கும் வகையில், ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க, விவசாயிகளும், மக்களும் ஒன்று திரள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முரு... மேலும் பார்க்க