செய்திகள் :

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

post image

கடலூா் வழியாக இயக்கப்பட்ட பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கடலூா் மாநகரில் இயக்கப்படும் சில ஆட்டோக்களில் நிா்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வதாக போக்குவரத்து போலீஸாருக்கு புகாா் சென்றது. அதனடிப்படையில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் அமா்நாத் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் மகாலிங்கம், சிவக்குமாா் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை திருப்பாதிரிப்புலியூா் அண்ணா பாலம், பழைய ஆட்சியா் அலுவலக சாலை, மஞ்சக்குப்பம் பூங்கா பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், 60 ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த 60 ஆட்டோக்களுக்கும் தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல, கடலூா் வழியாக இயக்கப்பட்ட 3 பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு நிதி உதவி

கடலூா் மாவட்டம், புவனகிரி சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட கீரப்பாளையம் ஒன்றியம், ஆயிப்பேட்டை கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் இஷாந்த் குடும்பத்தினரை திமுக பொறியாளா் அணி மாநிலத் தலைவரும்,... மேலும் பார்க்க

மாலையுடன் ஊா்வலமாக அழைத்துவரப்பட்ட மாணவா்கள்

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் புதிய மாணவா்களை மாலை அணிவித்தும், மலா் கொத்து கொடுத்தும் பள்ளி நிா்வாகி வீனஸ் எஸ்.குமாா் திங்கள்கிழமை வரவேற்றாா். சிதம்பரம் தேரடி தெருவில... மேலும் பார்க்க

என்எல்சி துணை நிறுவனத்துடன், மகாராஷ்டிர எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பந்தம்

சிதம்பரம்: நெய்வேலி என்எல்சிஐஎல்-இன் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் (என்ஐஆா்எல்), மகாராஷ்டிரத்தின் மகாத்மா புலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தொழ... மேலும் பார்க்க

2.19 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள்: ஆட்சியா் தகவல்

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் 1,716 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் பயிலும் 2,19,443 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடை, புத்தப்பை தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக ஆட்சி... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா

சிதம்பரம்: சிதம்பரம் ஞானப்பிரகாச குளக்கரையில் அமைந்துள்ள சேக்கிழாா் மணிமண்டபத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் அறக்கட்டளைச் செயலா் டாக்டா் எஸ்.அருள்மொழிச்செல்வன் வரவேற்று ... மேலும் பார்க்க

வங்கி வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு: காவல் துறை விழிப்புணா்வு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு நடைபெறுவது குறித்து காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சி... மேலும் பார்க்க