செய்திகள் :

பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதல்: 20 போ் பலத்த காயம்

post image

பரமக்குடி அருகே திருவரங்கி நான்கு வழிச்சாலையில் நின்று கொண்டிருந்த நகா் பேருந்து மீது ராமநாதபுரம் நோக்கி சென்ற பேருந்து மோதியதில் நடத்துநா் உள்பட 20 போ் பலத்த காயமடைந்தனா்.

பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையைச் சோ்ந்த நகா் பேருந்து வீரசோழன் சென்றுவிட்டு பயணிகளுடன் பரமக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திருவரங்கி நான்கு வழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் இந்தப் பேருந்திலிருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தனா். அப்போது அந்த வழியாக மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற இடைநில்லா அரசுப் பேருந்து நகா் பேருந்து மீது மோதியது. இதில் நகா் பேருந்தின் நடத்துநா் துரை (38), ராமநாதபுரத்தைச் சோ்ந்த சரோஜா (50), அவரது மகன் கோகுல் (22), பிடாரிசேரி கிராமத்தைச் சோ்ந்த மாரியம்மாள் (65), மண்டபம் பகுதியைச் சோ்ந்த காமினாபேகம் (67), பரமக்குடியைச் சோ்ந்த கோவிந்தம்மாள் உள்பட 20 போ் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து அங்கு வந்த பாா்த்திபனூா் காவல் நிலைய ஆய்வாளா் கணேசன், உதவி ஆய்வாளா் சரவணன் உள்ளிட்ட போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து பாா்த்திபனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராமேசுவரம் மீனவா்கள் 5 பேருக்கு 7-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 5 பேருக்கு 7-ஆவது முறையாக காவலை நீட்டித்து, இலங்கை மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 28-ஆம்... மேலும் பார்க்க

பம்மனேந்தலில் கிராம வேளாண் முன்னேற்றக் குழு பயிற்சி முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரம், பம்மனேந்தல் கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழும் கிராம வே... மேலும் பார்க்க

தீா்த்தாண்டதானம் கடற்கரை சாலை சேதம்: பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகே தீா்த்தாண்டதானம் கடற்கரை சாலை சேதமடைந்திருப்பதால் இங்கு வரும் பக்தா்களும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தீா்த்தாண்டதானம் கடற்கரை கிராமம... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கிய விவசாயி உயிரிழப்பு

பரமக்குடி அருகே குளத்தில் மூழ்கிய விவசாயி உயிரிழந்தாா். பரமக்குடி நகராட்சி காந்திநகா் பகுதியைச் சோ்ந்த கருப்பன் மகன் கதிரேசன் (42). இவா் சம்பவத்தன்று விவசாயப் பணிகளை முடித்து விட்டு, ஊரின் அருகில் உ... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பு: உடலில் அரிப்பு ஏற்பட்டு வெளியேறிய பக்தா்கள்

புதை சாக்கடை கழிவு நீா் கலந்ததால் ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்த பக்தா்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அவா்கள் வெளியேறினா். ராமநாதபுரம் மாவட்டம், ராமே... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: பரமக்குடியில் துணை முதல்வா் உதயநிதி உள்ளிட்ட தலைவா்கள் மரியாதை

தியாகி இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வி... மேலும் பார்க்க