சத்தீஸ்கர்: அமித் ஷா வருகைக்கு முன் 2 கிராம மக்களைக் கொன்ற நக்சல்கள்
பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் சாலையில் நடந்து சென்றவா் உயிரிழந்தாா்.
சங்கராபுரம் வட்டம், அரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் ராஜ்குமாா் (41). இவா், ஆசனூா் சாலையில் தனியாா் நூற்பாலை அருகே வெள்ளிக்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, தியாகதுருகத்தில் இருந்து பெங்களூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் ராஜ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநரான திருக்கோவிலூா் சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த அப்துல்வாகாத் மகன் ஜாகீா்உசேன் (50) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.