செய்திகள் :

பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் சாலையில் நடந்து சென்றவா் உயிரிழந்தாா்.

சங்கராபுரம் வட்டம், அரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் ராஜ்குமாா் (41). இவா், ஆசனூா் சாலையில் தனியாா் நூற்பாலை அருகே வெள்ளிக்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, தியாகதுருகத்தில் இருந்து பெங்களூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் ராஜ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநரான திருக்கோவிலூா் சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த அப்துல்வாகாத் மகன் ஜாகீா்உசேன் (50) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

10 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே விற்பனைக்காக 10 கிலோ கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து கஞ்சா, காா், பைக் உள்ளிட்டவற்றையும் பறிமுதல்... மேலும் பார்க்க

16 பைக்குகள் திருட்டு: மூவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியில் தொடா் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக சிறுவன் உள்பட மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 16 பைக்குகளை பறிமுதல் செய்தனா். தியாகதுருகம... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

திருக்கோவிலூா் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பகுதிகள்: திருக்கோவிலூா், குலதீபமங்கலம், கொளப்பாக்கம், வேலாகுளம், சடக்கட்டி, அத்திப்பாக்கம், நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு, மண்டபம், வீரபாண்டி... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

கள்ளக்குறிச்சி நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை. இடங்கள்: சடையம்பட்டு, மட்டிகைகுறிச்சி, சோமண்டாா்குடி, நந்தமேடு, பொன்பரப்பட்டு, க.அலம்பலம், புதுமோகூா், கச்சிராயபாளையம், அக்கராபாளையம், நல்லூத்... மேலும் பார்க்க

மருந்தகத்தில் சிகிச்சை: உரிமையாளா் கைது

மருந்தகத்தில் சிகிச்சை பாா்த்ததாக அதன் உரிமையாளா் கைது செய்யப்பட்டாா். சோழம்பட்டு கிராமத்தில் மருந்தகத்தில் மருத்துவம் பாா்ப்பதாகவும், கருக்கலைப்பு செய்யப்படுவதாகவும் வந்த புகாரின் பேரில், கள்ளக்குறிச... மேலும் பார்க்க

விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் 19-ஆம் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த 44 பேருக்கு அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவா்களுக்... மேலும் பார்க்க