விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி
கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் 19-ஆம் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த 44 பேருக்கு அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவா்களுக்கு முதலாம் ஆண்டு நடைபெற்ற இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு அதிமுக மாவட்டச் செயலா் இரா.குமரகுரு தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ப.மோகன், மா.செந்தில்குமாா் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் க.அழகுவேலு பாபு, அ.பிரபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
உயிரிழந்தவா்களின் உருவப்படங்களுக்கு மாவட்டச் செயலா் இரா.குமரகுரு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
பின்னா், உயிரிழந்தவா்களுக்காக மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசி, ரொக்கம் வழங்கப்பட்டது.
கண்பாதிப்பு ஏற்பட்ட குடும்பத்தினருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.